"ஹாய் அம்மா.. எப்படி இருக்கீங்க".. கைதிகள் இனி குடும்பத்தினருடன்.. வீடியோ காலில் பேசி மகிழலாம்!

Dec 13, 2023,06:12 PM IST
சென்னை: தமிழ்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், இனி தங்களது குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசி மகிழும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதுதொடர்பான அனுமதியை சிறைத் துறைக்கு, தமிழக அரசு வழங்கியுள்ளது. சிறைச்சாலைகளில் வீடியோ கால் வசதியுடன் கூடிய தொலைபேசி பூத்துகளை அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.  பொதுத்துறை நிறுவனங்களின் உதவியுடன் இதை மேற்கொள்ளுமாறும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு உத்தரவுகளை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது. 

கொரோனா காலத்தின்போது அனைத்து சிறைகளிலும் கைதிகளை, கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்துவதற்குப் பதில் வீடியோ கால் மூலம் ஆஜர்படுத்தும் முறை அமல்படுத்தப்பட்டது. அந்த வசதியை தங்களுக்கும் அளித்தால் குடும்பத்தினரைப் பார்த்து மகிழ முடியும் என்று கைதிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. அந்தக் கோரிக்கையை தற்போது பரிசீலித்து அனுமதி அளித்துள்ளது. 



உண்மையில் கொரோனா காலத்தின்போது கைதிகள், சிறைத்துறையின் ஆண்ட்ராய்ட் போன்கள் மூலமாக தங்களது குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசி வந்தனர். கொரோனோ காலம் முடிந்ததும் அது நிறுத்தப்பட்டு விட்டது என்பது நினைவிருக்கலாம்.

இதுதவிர மேலும் சில சலுகைகளையும் அரசு அனுமதித்துள்ளது. தற்போது கைதிகள் மாதம் 8 முறை, தங்களது குடும்பத்தினருடன் போனில் பேச முடியும். அதாவது 3 நாட்களுக்கு ஒருமுறை பேச வாய்ப்பளிக்கப்படும். அதை தற்போது 10 கால்களாக உயர்த்தியுள்ளது அரசு. இனிமேல் கைதிகள் மாதம் 10 முறை தங்களது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசலாம்.

அதேபோல கைதிகள் பேசும் நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு மாதத்திற்கு 56 நிமிடங்கள் வரை அதிகபட்சம் பேசலாம். அதை தற்போது 120 நிமிடங்களாக அதிகரித்துள்ளது அரசு. அதாவது ஒரு கால் அதிகபட்சம் 12 நிமிடம் வரை பேசலாம். 

அனைத்து மத்திய சிறைகள், புதுக்கோட்டையில் உள்ள பெண்கள் சிறப்பு சிறை மற்றும் பார்ஸ்டல் ஸ்கூலில் இந்த சலுகை அமலுக்கு வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி

news

விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு

news

யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!

news

பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா

news

என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!

news

இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!

news

தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?

news

அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!

news

தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்