தமிழ்நாடு மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. உதவித் தொகை இருமடங்காக உயர்வு!

Sep 20, 2024,04:50 PM IST

சென்னை: மாற்றுத் திறனாளி மாணாக்கர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் உதவித் தொகையை இருமடங்காக உயர்த்தி  முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணச்சலுகை, மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகை ரூபாய் 1000 என்பதை ரூ.1500 ஆக உயர்த்தி முதல்வர் வழங்கினார். அத்துடன், தற்போது  பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையையும் உயர்த்தி அவர்கள் ஊக்கமுடன் கல்வி கற்க உதவி செய்துள்ளார்.




பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களின் 1 முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை ஆண்டுக்கு 1000 என்பதை இரு மடங்காக உயர்த்தி ரூபாய் 2000 என்றும், 6ம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை ஆண்டுக்கு 3000 என்பதை இரு மடங்காக உயர்த்தி 6000 என்றும், 9ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை ஆண்டுக்கு ரூ. 4000 என்பதை இருமடங்காக உயர்த்தி ரூ.8 ஆயிரம் என்றும் உயர்த்தி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.


அதேபோல, கல்லூரிகளில் பட்டப்படிப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை 6000 என்பதை 12,000 என இரு மடங்காக உயர்த்தி வழங்கிட ஆணையிட்டுள்ளார். மேலும், தொழில் கல்லூரிகளிலும், பட்ட மேற்படிப்புகளிலும் படிக்கின்ற மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை ரூ. 7000 என்பதை 14,000 ஆக இரண்டு மடங்கு உயர்த்தி வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார்.


இப்படி, மாற்றுத்திறனாளிகள் உள்ளங்களில் தேங்கி கிடக்கும் ஏக்க உணர்வுகளை தீர்க்கும் வகையில் அவர்களுக்கு அனைத்து வகைகளும்  முதல்வர் மு க ஸ்டாலின் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் அவர்கள் அனைவரும் பயன் பெறும் வகையிலும் அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவி ஊக்கத் தொகையை இரண்டு மடங்காக உயர்த்தி அதற்காக ரூபாய் 14 கோடியே 90 லட்சத்து 52 ஆயிரம் அனுமதித்து செப்டம்பர் 10.9.2024 அன்று ஆணை பிறப்பித்துள்ளார்.


பள்ளி, கல்லூரி படிப்புகளுடன் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்கள் படிப்பை நிறுத்தி விடக்கூடாது என்பதற்காக அவர்கள் ஆராய்ச்சி படிப்புகளிலும் ஈடுபட வேண்டும் என்று விழைவோடு ஆராய்ச்சி படிப்பில் சேரும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு ஊக்கம் அளிப்பதற்காக முதல்வரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்தின் தலா ஒரு லட்சம் வீதம் 50 மாற்று திறனாளிகள் பயன்பெறும் வகையில் 50 லட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்தும் முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வந்தாச்சு அறிவிப்பு.. விக்கிரவாண்டியில் அக். 27ல் முதல் மாநில மாநாடு.. புதிய பாதை அமைப்போம்.. விஜய்

news

திருப்பதி லட்டில் தரமில்லாத நெய்.. விலங்கு கொழுப்பு கலந்தது உண்மையே.. தேவஸ்தானம் பகீர் தகவல்!

news

பாலியல் துன்புறுத்தல் சர்ச்சையில் சிக்கி.. பெங்களூரில் கைதான.. ஜானி மாஸ்டருக்கு 15 நாள் சிறை!

news

நெற்றிப் பொட்டு போயே போச்சு.. கவனிச்சீங்களா?.. முழுமையான பெரியார் தொண்டனாக மாறிய விஜய்!

news

வடக்கு அந்தமான் அருகே.. புதிய காற்றழுத்தம்.. நாளை உருவாகும் என்று வானிலை மையம் தகவல்

news

Su Venkatesan Vs Vanathi Srinivasan.. உங்களுக்கு ஒவ்வாமையா.. முதல்ல பன் பட்டருக்கு வழி சொல்லுங்க!

news

திருப்பதி லட்டில் கொழுப்பா... குடும்பத்தோடு சத்தியம் செய்ய நாயுடு ரெடியா? .. ஜெகன் கட்சி சவால்!

news

என்னிடம் அரசியல் கேள்வி கேட்காதீங்கன்னு சொன்னேன்ல.. செய்தியார்களிடம் சீறிய ரஜினிகாந்த்!

news

ஏழு கொண்டலவாடா.. திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்படம்.. தடுக்க பவன் கல்யாண் தரும் ஐடியா!

அதிகம் பார்க்கும் செய்திகள்