சென்னை: 20 வகையான அரசு பணிகளுக்கு டிஎன்பிசி எழுத்து மற்றும் நேர்முக தேர்வு மூலம் ஆள் சேர்க்க உள்ளது. இந்தப் பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 14 ஆகும்.
பல்வேறு வகையான அரசு வேலைகளுக்கு தேவைப்படும் ஆட்களை எடுக்கும் அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
பணியிடங்கள் காலியாக உள்ள வேலை விவரம்:
அரசு சட்டக் கல்லூரிகளில் பிடி துறை இயக்குநர் பதவி (12 பணியிடங்கள்), மேனேஜர் கிரேட் 3 (2), சீனியர் ஆபீசர் (9), உதவி மேலாளர் (14), உதவி மேலாளர் (லீகல் - 2), தமிழ் ரிப்போர்ட்டர் (5), இங்கிலீஷ் ரிப்போர்ட்டர் (5), அக்கவுண்ட்ஸ் ஆபீசர் கிளாஸ் 3 (1), அக்கவுண்ட்ஸ் ஆபீசர் (3), உதவி மேலாளர் - அக்கவுண்ட்ஸ் (21), துணை மேலாளர் அக்கவுண்ட்ஸ் (1), உதவி மேலாளர் பினான்ஸ் (1), உதவி பொது மேலாளர் (1), விவசாயத்துறை உதவி இயக்குநர் (6), புள்ளியியல் உதவி இயக்குநர் (17), சமூக நலத்துறை பெண்கள் முன்னேற்றத்துறை உதவி இயக்குநர் (3), முதுநிலை உதவி இயக்குநர் பாய்லர் (4), பர்சார் (6), டவுன் பிளானிங் உதவி இயக்குநர் (4), உதவி மேலாளர் புராஜக்ட்ஸ் (2).
மொத்தம் 118 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் இந்த பணிகளுக்கு ஆளெடுப்பு நடைபெறவுள்ளது.
ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் ஜூன் 14ம் தேதி இரவு 11.59 மணி. திருத்தப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் - ஜூன் 19ம் தேதி அதிகாலை 12.01 முதல் 21ம் தேதி இரவு 11.59 மணிக்குள்.
தேர்வு குறித்த விவரம்:
முதல் தாள் தேர்வு - ஜூலை 28ம் தேதி காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை.
2ம் தாள் தேர்வு - ஆகஸ்ட் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெறும்.
மேலும் விபரங்களுக்கு கீழ்கண்ட இணைப்பை அணுகலாம்.
https://tnpsc.gov.in/Document/english/07_2024_CTS_English_.pdf
CSK vs KKR.. மொத்தமாக முடிச்சு விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சென்னைக்கு 5வது தோல்வி!
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா
14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை
தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!
400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!
தமிழகத்தில்.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!
விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!
குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!
{{comments.comment}}