சூடாகி வரும் தக்காளி விலை.. சுமையைக் குறைக்க பண்ணைப் பசுமைக் கடைகளில் மலிவு விலை விற்பனை!

Oct 09, 2024,11:35 AM IST

சென்னை:   தக்காளியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பண்ணை பசுமைக் கடைகளில்  தக்காளி மற்றும் வெங்காயத்தை  மானிய விலையில் விற்பனை செய்ய தொடங்கியுள்ளது.


நாட்டில் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மாநிலங்களில்  அதிகம் உற்பத்தி செய்யப்படும் தக்காளி பிற மாநிலங்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டு வருவது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக அப்பகுதிகளில் கடுமையான மழையும் வெயிலும் மாறி மாறி நிலவு வருகிறது. இதனால் தக்காளியின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.




இதனால் தக்காளி வரத் குறைந்து பிற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் தக்காளியின் அளவும் குறைந்தது. இதன்  எதிரொலியாக வரத்து குறைந்து தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தக்காளியின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு மக்களுக்கு மானிய விலையில் தக்காளியை விற்பனை செய்யப்பட்டு வந்தது.  இதனை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட பலப் பகுதிகளுக்கு வரும் தக்காளியின்  வரத்து குறைந்தது.இதன்  காரணமாக தற்போது தமிழ்நாட்டிலும்  தக்காளியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் சோகத்தில் உறைந்தனர்.


இந்த நிலையில் விலை உயர்வை கட்டுப்படுத்த, பொதுமக்களின் நலன் கருதி பண்ணை பசுமை கடைகளில் தக்காளி மற்றும் வெங்காயம் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது ‌. அதன்படி சென்னையில் நேற்று ஒரு கிலோ தக்காளி நூறுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் பண்ணை பசுமைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி கிலோ ₹ 60க்கு விற்பனை செய்யப்படுகிறது‌. அதேபோல் பெரிய வெங்காயம் ரூபாய் 40க்கு விற்பனை செய்யப்படுகிறது. ‌


நாசிக்கில் இருந்து வந்த வெங்காயம் தேனாம்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அண்ணா நகர், ஆகிய பண்ணை பசுமை கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  பதுக்கல் மற்றும் வெளிச்சந்தையில் விற்பதை தடுக்க ஒருவருக்கு அதிகபட்சமாக 2 கிலோ மட்டுமே தக்காளி வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2026ல் சட்டமன்ற தேர்தல்.. நாலே கூட்டணிதான்.. விறுவிறுப்பாகும் கட்சிகள்.. பரபரக்கும் அரசியல் களம்!

news

தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு.. வானகரம் விழாவில் அறிவிப்பு!

news

பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன்.. அமைச்சர் பொன்முடி!

news

என்னை யாரும் சந்திக்க வர வேண்டாம்... டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

அதிமுக கூட்டணி அறிவிப்பு.. முதல்வர் மனதில் இடிபோல இறங்கியுள்ளது.. எடப்பாடி பழனிச்சாமி

news

தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருப்பதால்.. கூட்டணி குறித்து யோசித்து முடிவு எடுப்போம்.. பிரேமலதா

news

பாஜக திமுக மறைமுக கூட்டணி அம்பலமாகிவிட்டது.. தவெக தலைவர் விஜய்

news

அதிமுக- பாஜக கூட்டணி.. தோல்வி கூட்டணி.. முதல்வர் மு.க ஸ்டாலின் கடும் விமர்சனம்!

news

பொன்முடி பேச்சு.. ஏப்., 16ம் தேதி அதிமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிச்சாமி!

அதிகம் பார்க்கும் செய்திகள்