பிரதமர் மோடியுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி சந்திப்பு.. என்ன விசேஷம்?

Jul 16, 2024,04:07 PM IST
டெல்லி: டெல்லி சென்ற தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசினார். 

மக்களவைத் தேர்தல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்து முடிந்தது. அதன்பின்னர் பாஜக தலைமையிலான கூட்டணி மத்தியில் ஆட்சி பெறுப்பேற்றது. 3வது முறையாக பிரமதராக பதவி ஏற்றுக்கொண்டார் நரேந்திர மோடி. அவர் பதவியேற்ற பின்னர் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆளுநர்கள், முதல்வர் டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், 5 நாள் பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று செல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் செயலாளர், பாதுகாப்பு அதிகாரிகள், உதவியாளர் ஆகியோர் உடன் சென்றனர். டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை நேற்று சந்தித்தார் ஆளுநர் ரவி. அதனைத் தொடர்ந்து இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார்.



இது தொடர்பாக தமிழக ஆளுநர் ரவி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள டிவீட்டில்,  பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழ்நாட்டு மக்கள் சேவையில் அவரது அக்கறை, தொலைநோக்குப் பார்வை மற்றும் வழிகாட்டுதலின் பலனைப் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

பயணம் முடிந்து ஆளுநர் 19ம் தேதி சென்னை திரும்புகிறார். ஆளுநர் பிரதமரை சந்தித்தபோது, கள்ளக்குறிச்சி விஷசாராய சம்பவம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை கோரி, எதிர்க்கட்சிகள் ஆளுநரிடம் மனு அளித்தது தொடர்பாக விவாதித்தாரா என்று தெரியவில்லை.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!

news

நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்

news

தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!

news

பசங்களா இன்னிக்கு ஜெயிச்சிருவீங்கள்ள.. சேப்பாக்கத்தில் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் மஞ்சள் படை!

news

தமிழக பாஜக தலைவர் நியமனம் எப்போது?.. 11 ஆம் தேதி அன்று தெரியும்!

news

எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்

news

தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!

news

அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!

news

சைதை துரைசாமி வேலை வெட்டி இல்லாதவர்: கே.பி.முனுசாமி கடும் தாக்கு!

அதிகம் பார்க்கும் செய்திகள்