சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி டெல்லிக்கு புறப்பட்டுப் போயுள்ளார். இன்று காலை விமானத்தில் அவர் டெல்லி கிளம்பிச் சென்றார்.
தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் 12ம் தேதி தொடங்கியது. அப்போது ஆளுநர் ஆர். என். ரவி கலந்து கொண்டு தனது உரையை முழுமையாக படிக்கவில்லை. தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்பது குறித்து அதிருப்தி தெரிவித்த அவர் படிக்காமல் அமர்ந்து விட்டார். பின்னர் சபாநாயகர் அப்பாவு வாசித்து முடித்தார்.
தனது பேச்சின் முடிவில் ஆளுநர் குறித்து சபாநாயகர் கூறிய கருத்துக்களாலும், தனக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டதாலும் அதிருப்தி அடைந்த ஆளுநர் ஆர். என். ரவி, தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே சட்டசபையிலிருந்து வெளிநடப்புச் செய்து வெளியேறினார்.
இந்த நிலையில் இன்று சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்தப் பின்னணியில் இன்று காலை ஆளுநர் ஆர். என். ரவி அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவர் நான்கு நாட்கள் டெல்லியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின்போது முக்கியமாக அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசவுள்ளார்.
இந்த மாதத் தொடக்கத்தில்தான் டெல்லிக்குச் சென்று திரும்பினார் ஆளுநர். ஒரே மாதத்தில் அவர் 2வது முறையாக டெல்லிக்குச் செல்வது பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}