3வது ஆண்டாக சர்ச்சை.. தமிழ்த் தாய் வாழ்த்தால் தொடரும் சலசலப்பு.. வெளிநடப்பு செய்த ஆளுநர்!

Jan 06, 2025,05:08 PM IST

சென்னை: தொடர்ச்சியாக 3வது ஆண்டாக ஆளுநர் உரை தொடர்பான சர்ச்சை நீடிப்பது சலசலப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


ஆளுநர் ஆர். என்.ரவிக்கும், திமுக அரசுக்கும் இடையே தொடர்ந்து பூசல் நிலவி வருகிறது. அவ்வப்போது அடங்குவது போல தெரிந்தாலும் கூட, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இது பெரிதாக வெடித்துச் சிதறுகிறது.  குறிப்பாக ஆளுநர் உரை தொடர்பாக கடந்த 3 வருடமாக சர்ச்சை நிலவி வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு முதல் முறையாக பெரிய சர்ச்சை வெடித்தது.




2023ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி சட்டசபை கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்குவதாக திட்டம். ஆளுநர் ஆர். என். ரவியும் சட்டசபைக்கு வந்தார். ஆளுநர் உரையை வாசிக்க ஆரம்பித்த அவர் அதில் இடம் பெற்றிருந்த சில வரிகளைத் தவிர்த்து விட்டு வாசித்தார். மேலும் புதிதாக சில வாசகங்களையும் அவர் சேர்த்துப் படித்தார். 


அதன் பின்னர் எழுந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் அரசு தயாரித்துக் கொடுத்த உரையை முழுமையாக படிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும் ஆளுநர் அவராக சேர்த்து வாசித்த வாசகங்கள் அவைக் குறிப்பில் இடம் பெறாது என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் வாசிக்கப்பட்டபோது ஆளுநர் ஆர். என். ரவி. அவையிலிருந்து வெளியேறிச் சென்றார்.


இதைத் தொடர்ந்து 2024ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி சட்டசபை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. வழக்கம் போல கூட்டத் தொடர் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியபோது முதலில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும். அதன் பிறகே தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும் என்ற தனது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை  என்றார். மேலும் ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ள சில பகுதிகளை தன்னால் ஏற்க முடியாது என்று கூறி உரையை வாசிக்க மறுத்து அமர்ந்து விட்டார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு உரையை வாசித்தார்.


அதன் பின்னர் ஆளுநரின் செயல்பாடு குறித்து அப்பாவு சில கருத்துக்களைக் கூறினார். அவர் சொல்லி முடித்த அடுத்த நிமிடமே ஆளுநர் அவையிலிருந்து வெளியேறினார். அவர் வெளியேறிய பின்னர் ஆளுநர் உரை சட்டசபையில் சமர்ப்பிக்கப்பபடியே அவைக் குறிப்பில் பதிவேற வேண்டும் என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.


இந்த ஆண்டும் தமிழ்த் தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டதால் அதிருப்தி அடைந்து ஆளுநர் வெளியேறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

CSK vs KKR.. மொத்தமாக முடிச்சு விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சென்னைக்கு 5வது தோல்வி!

news

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா

news

14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!

news

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை

news

தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!

news

400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!

news

தமிழகத்தில்‌.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!

news

விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!

news

குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!

அதிகம் பார்க்கும் செய்திகள்