சென்னை: சென்னை கடற்கரை உழைப்பாளர்சிலை அருகே நடந்த குடியரசு தின விழாவில், தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். காவல் துறை அணிவகுப்பையும் அவர் ஏற்றுக் கொண்டார்.
சென்னையில் வழக்கமாக மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகே குடியரசு தினவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது மெட்ரோ பணிகள் நடைபெறுவதன் காரணமாக, உழைப்பாளர் சிலை அருகே இந்த ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.
இன்று காலை 7.25 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விழா நடைபெறும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். அவருக்குப் பின்னர் சிறிது நேரத்தில்ஆளுநர் ஆர். என்.ரவி வந்தார். ஆளுநர் வந்ததும், முதலில் காவல்துறை அணிவகுப்புமரியாதை கொடுக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்டார் ஆளுநர். அதன் பின்னர் அமைச்சர்கள், அதிகாரிகளை ஆளுநருக்கு முதல்வர் அறிமுகப்படுத்தி வைத்தார்.
இதையடுத்து தேசியக் கொடி ஏற்றும் வைபவம் நடந்தது. ஆளுநர் ஆர். என். ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தேசியக் கொடி பட்டொளி வீசி பறந்தபோது வானிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.
தேசிய கொடியை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றி வைத்தார். அப்போது அந்த பகுதியின் மேல் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர் தூவியது. இதைத் தொடர்ந்து அணிவகுப்புகள் தொடங்கின. முப்படையினர் அணிவகுப்புக்குப் பின்னர் பல்வேறு அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும், கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}