தமிழக பட்ஜெட் 2024-25:  கலைஞர் வீட்டு வசதித் திட்டம்.. கோவையில் பிரமாண்ட நூலகம்.. பட்ஜெட் அம்சங்கள்

Feb 19, 2024,10:06 PM IST

சென்னை:  தமிழ்நாடு சட்டசபையில் தமிழக அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. 




பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் மற்றும் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் விவரம்:


* தஞ்சாவூரில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் சிப்காட் தொழிற்பூங்கா

* கோவையில் ரூ.1100 கோடியில் புதிய தொழில்நுட்ப பூங்கா

* மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்காக 6 இடங்களில் பாரா தடகள விளையாட்டு மையங்கள்

* இல்லம் தேடிக் கல்வித் திட்டத்திற்கு ரூ. 100 கோடி

* கலைஞர் மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு

* முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் செயல்படுத்த ரூ.27000 கோடி நிதி ஒதுக்கீடு

* கீழடியில் திறந்தவெளி அரங்கம் ரூ.17 கோடி ஒதுக்கீடு. தொல்லியல் துறைக்கு ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு

* சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்க்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு

* அடையாறு ஆற்றை மீட்டெடுக்க ரூ. 1500 கோடி நிதி ஒதுக்கீடு

* கோவளம், பெசன்ட் நகர், எண்ணூர் கடற்கரை ரூ. 100 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்

* சிங்கார சென்னை திட்டத்திற்கு ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு

* மினி பேருந்து திட்டம் விரிவுபடுத்தப்படும். மினி பேருந்து திட்டம் விரிவுபடுத்தப்படும். வரும் நிதி ஆண்டில் 3000 புதிய பேருந்துகள், 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.

* திருப்பரங்குன்றம் , திருநீர்மலை கோயில்களில் ரோப் கார் வசதிகள் ஏற்படுத்தப்படும்.

* ரூ.5,718 கோடி மதிப்பிலான 6,071 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்பு

* 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில்களில் ரூ.100 கோடி மதிப்பில் திருப்பணிகள்

* பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் புனரமைப்புத் திட்டம்.

* ஆதிதிராவிட இளைஞர்களுக்கான தொழில்முனைவோர் கடன் திட்டம் - ரூ.50 கோடி ஒதுக்கீடு. 35% வட்டி * மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்

* அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் - ரூ.230 கோடி ஒதுக்கீடு

* ஆதிதிராவிட இளைஞர்களுக்கான தொழில்முனைவோர் கடன் திட்டம்.

* கடற்கரை மேம்பாட்டுக்காக  'நீலக் கொடி கடற்கரைச் சான்றிதழ்' - ரூ.250 கோடி ஒதுக்கீடு..!

ரூ.50 கோடியில் புராதனக் கட்டடங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.

*  "கலைஞர் பன்னாட்டு அரங்கம்" - 3 லட்சம் சதுர அடியில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் முட்டுக்காடு                   பகுதியில் அமைக்கப்படும்.




*  ரூ.20 கோடியில் 'கைவினைஞர் மேம்பாட்டுத் திட்டம்'  - தமிழ்நாடு, இந்தியாவின் பிற மாநிலங்களில் உற்பத்தி       செய்யப்படும் கைத்தறி, கைவினைப் பொருள்கள் விற்பனைக்காக சென்னையில் வணிக வளாகம். ரூ.227 கோடி      ஒதுக்கீடு

*  கரூர், ஈரோடு, விருதுநகர் மாவட்டத்தில் சிறிய ஜவுளிப் பூங்காக்கள் - ரூ.20 கோடி ஒதுக்கீடு. 

     ஜவுளித் தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு

*  ஆவின் பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள். ரூ.60 கோடி மதிப்பீட்டில் நவீனத் தொழில்நுட்பங்கள் & தானியங்கி           இயந்திரங்கள்.

*  ரூ.450 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவுகளும் மீன் இறங்குதளங்களும் அமைக்கப்படும்.

*  கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு ரூ. 13,720 கோடி நிதி ஒதுக்கீடு

*அரசு பங்களிப்புடன் பூந்தமல்லி அருகில் புதிய திரைப்பட நகரம் உருவாக்கப்படும்

*திறந்த வெளி அருங்காட்சியகத்திற்கு ரூ.17 கோடி நிதி ஒதுக்கீடு

*  மொழித் தொழில்நுட்பப் புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி ரூ. 5 கோடி

*  சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ. 12,000 கோடி நிதி ஒதுக்கீடு

*  மூன்றாம் பாலினத்தோரின் கல்லூரிப் படிப்புக்கான முழுச் செலவையும் அரசே ஏற்கும்

* 25 கோடியில் ஆட்டிசம் உடையோருக்கு உயர்திறன் மையம்.

* ராமநாதபுரம், ஏற்காட்டில் ரூ 56 கோடி செலவில் ரேடார்கள் அமைக்கப்படும். 

* மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் அமைத்திடும் சட்ட முன்வடிவு நடப்பு கூட்ட தொடரில்  அறிமுகப்படுத்தப்படும். 




* 25 கோடியில் ஆட்டிசம் உடையோருக்கு உயர்திறன் மையம் சென்னையில் அமைக்கப்பட உள்ளது.

*  மதுரை மற்றும் திருச்சியில் புதிய டைடல் பார்க் அமைக்கப்படும்.

*  மதுரையில் ரூபாய் 345 கோடியில் 6.4 லட்சம் சதுர அடியில் புதிய டைடல் பார்க் அமைக்கப்படும்.

*  திருச்சியில் ரூபாய் 350 கோடியில் 6.3 லட்சம் சதுர அடியில் புதிய டைடல் பார்க் அமைக்கப்படும்.

*  தஞ்சை, சேலம், வேலூர்,திருப்பூர், தூத்துக்குடி, உள்ளிட்ட ஐந்து மாநகரங்களில் நியோ டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும். 

*  புதிதாக அமைக்கப்படும் நியோ டைடல் பூங்காக்கள் மூலம் 13,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்