"பிடி பிடி.. விடாதே".. தச்சங்குறிச்சியில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு.. செம விறுவிறுப்பு!

Jan 06, 2024,01:35 PM IST
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று கோலகலமாக தொடங்கி நடந்து வருகிறது

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான  பொங்கல் பண்டிகை  முன்னிட்டு ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டுகள் நடைபெறும். அதிலும் ஜல்லிக்கட்டுதான் டாப்பில் இருக்கும். விவசாயத்திற்குப் பயன்படும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி  தமிழகத்தின் பல முக்கிய மாவட்டங்களில் நடைபெறுவது வழக்கம்.   இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டி சீசன் தொடங்கியுள்ளது. ஜல்லிக்கட்டு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர்,  தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டுகள்தான்.



இதில், ஆண்டுதோறும் புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தான் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கும். இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கி உள்ளது. இதற்கான பணிகள் முழு வீட்டில் நடைபெற்று வந்தன. வாடிவாசல், பேரிகார்டு, காளைகளுக்கு பயிற்சி என் பல முன்னேற்பாடுகள் கடந்த சில நாட்களாகவே  நடைபெற்று வந்தன.

இந்நிலையில் இன்று கோலகலமாக தொடங்கியது ஜல்லிக்கட்டு. மாநில சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி போட்டியைத் தொடங்கி வைத்தார். 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுளள்ளன. மாடுகள் சீறிப் பாய, மாடு பிடி வீரர்கள் உற்சாகத்துடன் இறங்கியுள்ளனர். மாடுகள் பலமா, அதைப் பிடிக்கத் துடிக்கும் காளையர்கள் பலமா என்ற போட்டா போட்டி தச்சங்குறிச்சியைக் கலக்கிக் கொண்டுள்ளது. 

போட்டிகளை காண ஏராளமானோர் வருகைதந்துள்ளனர். தச்சங்குறிச்சியே தற்பொழுது விழாக்கோலம் பூண்டுள்ளது. பலத்த பாதுகாப்புடனும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலுடனும் போட்டி நடந்து வருகிறது. கட்டில், சேர், மிக்ஸி, பீரோ என விதம் விதமான பரிசுகள் காளையர்களுக்கு அளிக்கப்படுகின்றன.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்