தைபே: தைவானைச் சேர்ந்த ஷிப்பிங் நிறுவனம் ஒன்று, தனது ஊழியர்களுக்கு போனஸாக, நான்கு வருட சம்பளத்தை மொத்தமாக கொடுத்து அவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தைவானைச் சேர்ந்த எவர்கிரீன் மெரைன் கார்ப்பரேஷன் என்ற ஷிப்பிங் நிறுவனத்தில், வருடக் கடைசியில் போனஸ் வழங்கப்படுவது வழக்கம். இந்த முறை ஊழியர்கள் எதிர்பாராத வகையிலான போனஸைக் கொடுத்து அந்த நிறுவனம் அவர்களை திக்குமுக்காட வைத்துள்ளது. அதாவது 50 மாத சம்பளத்தை அப்படியே போனஸாக கொடுத்துள்ளது அந்த நிறுவனம். இது 4 வருட சம்பளத்திற்குச் சமமாகும்.
அதேசமயம், மொத்த ஊழியர்களுக்கும் இந்த போனஸ் தரப்படவில்லை. மாறாக தைவானைச் சேர்ந்த ஊழியர்களுக்கு மட்டும் இது தரப்பட்டுள்ளதாம். யாருக்கெல்லாம் போனஸ் தரப்பட்டது என்ற விவரத்தையும் அந்த நிறுவனம் வெளியிடவில்லை.
கடந்த இரண்டு வருடமாக இந்த நிறுவனம் நல்ல லாபம் ஈட்டி வருகிறதாம். கொரோனா காரணமாக தொய்வடைந்திருந்த நிறுவனத்தின் வர்த்தகம் தற்போது சூடு பிடித்திருப்பதால் வருமானமும் அதிகரித்துள்ளது. இதனால் அதன் பலனை ஊழியர்களுக்குக் கொடுத்துள்ளது இந்த நிறுவனம். கடந்த ஆண்டு இந்த நிறுவனத்தின் வருவாய் 20.7 பில்லியன் டாலராக இருந்ததாக கூறப்படுகிறது. இது 2020ம் ஆண்டை விட 3 மடங்கு அதிகமாகும்.
நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி
விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு
யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!
பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா
என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!
இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!
தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?
அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!
தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்
{{comments.comment}}