Sweet Pongal: பள்ளிகளில்.. முக்கிய தலைவர்களின் பிறந்தநாளன்று.. இனிப்பு பொங்கல்.. அரசு உத்தரவு!

Jun 18, 2024,04:02 PM IST

சென்னை:  முக்கிய தலைவர்களின் பிறந்தநாள் அன்று பள்ளிகளில் மதிய உணவுடன் இனிப்பு பொங்கல் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


தமிழ்நாடு முழுவதும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் அனைத்து சத்துணவு மையங்களில் மதிய உணவுகள் தினசரி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி சட்டப்பேரவையில், சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் குழந்தைகளுக்கு பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாள்  அன்று இனிப்புப் பொங்கல் வழங்கப்படுவதுபோல் இனி வரும் காலங்களில் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி பிறந்த நாளன்றும் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது. 




அதன்படி இந்த வருடம் ஜூன் மூன்றாம் தேதி கலைஞர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு, அந்தத் தேதியில் பள்ளிகள் விடுமுறை என்பதால் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட 10ம் தேதி மதிய உணவுடன் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது. தற்போது இந்தத் திட்டத்தை அரசு மேலும் விரிவுபடுத்தியுள்ளது.


இந்த நிலையில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் முக்கிய தலைவர்களின் பிறந்தநாள் அன்று மதிய உணவுடன் இனிப்பு பொங்கல் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 


இதன்படி தமிழகம் முழுவதும் 43, 131 சத்துணவு மையங்களில்  4 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு உடன் சேர்த்து இனிப்பு பொங்கல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அரிசி பருப்பு, வெல்லம் என ஒரு மாணவிக்கு 150 கிராமுக்கு இரண்டு ரூபாய் வீதம் மொத்தம்  4. 27 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்