சுவரொட்டி பார்த்திருப்பீங்க.. ருசிச்சு "சாப்பிட்டிருக்கீங்களா".. அட லன்ச் டைம் மேட்டர்தான்.. படிங்க!

Apr 17, 2024,06:44 PM IST

- சந்தன குமாரி


லன்ச் டைம் வந்துட்டாலே பசியும் கூடவே வயிறை பிறாண்ட ஆரம்பித்து விடும்.. ஸோ, இதுதான் கரெக்டான டைம் என்று உங்களுக்காக ஒரு சூப்பர் உணவோட வந்திருக்கோம்.. வாங்க படிக்கலாம்.


நாம் அனைவரும் அதிகம் விரும்ப கூடிய இறைச்சி வகைகளில் ஒன்று ஆட்டு இறைச்சி. ஆட்டு இறைச்சியில் அனைத்து உறுப்புகளும் அசைவ பிரியர்கள்  விரும்பி சாப்பிடும் ஐட்டங்கள்தான்.. தலை முதல் கால் வரை ஆட்டை உண்டு இல்லை என்று செய்து விடுவார்கள் நம்மவர்கள்.. ஆடுன்னான அதாவது ஆட்டுக்கறின்னா நமக்கு நாவெல்லாம் நீர் சொட்டி விடும்.. இன்னிக்கு ஒரு புடி என்று கோதாவில் குதிவித்து கறிக் குழம்பையும், சோறையும் ஒரு கை பார்க்கத் துடிப்போம்.


ஆட்டு இறைச்சியில் பலரும் விரும்பி சாப்பிடுவது மண்ணீரல்தான். கிராமப்புறங்களில் இதை சுவரொட்டி என அழைக்கின்றனர். சுவரொட்டி என்று அழைக்க காரணம் பச்சையாக இருக்கும் போது சுவற்றில் ஒட்டிக் கொள்ளும் தன்மை கொண்டது. ஆட்டு மண்ணீரல் பார்ப்பதற்கு சிறிதாக இருந்தாலும் ஏராளமான சத்துக்கள் நிறைந்ததாக உள்ளது. சத்துக்கள் மட்டுமின்றி அதிக அளவு ருசியுடனும் இருக்கும். ஈரல் சாப்பிடுற எல்லாருமே மண்ணீரல் விரும்பி சாப்பிடுவாங்க. முதல்ல அதோட பயன்கள் என்னன்னு பார்க்கலாம்.




உடலில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ரத்த சோகையை வரவிடாமல் தடுக்கிறது. ரத்த சோகை இருப்பவர்கள் வாரந்தோறும் சுவரொட்டி சாப்பிட்டு வர எளிதில் குணமடையும். இதில் அமினோ அமிலங்கள், B12,விட்டமின் சி, இரும்பு சத்துக்கள்  நிறைந்திருப்பதால் கர்ப்பிணிகள் ,நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் சாப்பிடும் போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.


சிறுநீரக நோய் உள்ளவர்கள் வாரம் ஒரு முறை சுவரொட்டி சாப்பிடுவதன் மூலம் சிறுநீரக தொற்று சரியாகி விடுகிறது. ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை எளிதில் குணமடையும். அதுபோக கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கிற்கு சிறந்த மருந்தாக சுவரொட்டி இருக்கிறது. முடக்கு வாதம் இருப்பவர்கள் சுவரொட்டி சாப்பிடுவதன் மூலம் விரைவில் குணமடையும்.


இரும்புச்சத்து குறைவாக உள்ளவர்கள் வாரந்தோறும் சுவரொட்டி சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன்கள் பெற முடிகிறது. சரி சுவரொட்டியை வச்சு எப்படியெல்லாம் சமைக்கலாம்.. அதையும் பார்ப்போமா!


சுவரொட்டி வருவல்:




இரண்டு டம்பளர் அளவு தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதில் கட் செய்யாத முழு சுவரொட்டியை போட்டு கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்ததும் சுவரொட்டியை எடுத்து அதன் மேல் இருக்கும் வெள்ளை தோலினை நீக்க வேண்டும். அதன் பிறகு அதை சிறு துண்டுகளாக கட் பண்ணி வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் மிதமான சூட்டில் கடாயை வைத்து நான்கு ஸ்பூன் எண்ணெய் விட்டு  வெங்காயம், சீரகம், மஞ்சள் தூள், கருவேப்பிலை, சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் .


நன்கு வதங்கிய பின்னர் நறுக்கி வைத்த சுவரொட்டி சேர்க்கவும். நன்கு வதங்கியதும் ஒரு ஸ்பூன் கரம் மசாலா, ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து நன்கு வதக்கி மூன்று நிமிடம் மூடி வைக்கவும் . கடைசியாக கொத்தமல்லி இலைகளை போட்டு இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான சுவரொட்டி வருவல் ரெடி. சாப்பிட்டு பாருங்க டேஸ்ட் அடி பொலியா இருக்கும்.


சுவரொட்டி கிரேவி:


இரண்டு டம்பளர் தண்ணீருடன் சுவரொட்டியை நன்றாக வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். வெள்ளைத்தோலை நீக்கி சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். சிறிதளவு தேங்காய், பெருஞ்சீரகம் சேர்த்து நன்கு மையாக அரைத்து வைத்துக் கொள்ளவும். அதன் பிறகு அடுப்பில் மிதமான சூட்டில் கடாயை வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் விடவும். பட்டை, கிராம்பு, லவங்கம் , சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி விடவும். 


அடங்கியவுடன் சுவரொட்டியை சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் அரைத்து வைத்த மசாலாவையும் சேர்த்து கரம் மசாலா ஒரு ஸ்பூன் போட்டு நன்கு கொதிக்க விடவும். கடைசியாக புதினா கொத்தமல்லி சேர்த்து இறக்கி விடவும். இப்போது சுவையான சுவரொட்டி கிரேவி ரெடி.


தீயில்வாட்டி சாப்பிடுதல்:


இது போக சிலர் சுவரொட்டியை சுட்டு சாப்பிடுறாங்க. நன்கு கழுவிய பின்னர் உப்பு ,மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் சேர்த்து சுவரொட்டியுடன் நன்கு பிறட்டவும். அதன் பிறகு அடுப்பில் வைத்து வாட்ட வேண்டும். நன்கு வாட்டிய பிறகு சிறு துண்டுகளாக வெட்டி அப்படியே சாப்பிடலாம். அதுவும் பயங்கர ருசியாக இருக்கும்.


சுவரொட்டி சூப்:


சுவரொட்டி மேல் இருக்கும் வெள்ளைத் தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளணும். இதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து கடாயில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கடுகு தாளித்து அதுடன் சீரகம் ,சோம்பு ,பட்டை ,கிராம்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதன் பிறகு நறுக்கி வைத்த வெங்காயம் ஒரு தக்காளி சிறு துண்டுகளாக நறுக்கி வதக்க வேண்டும். பின்னர் வெட்டி வைத்த சுவரொட்டிகளை சேர்க்க வேண்டும். ஒரு சுவரொட்டிக்கு 500 ml தண்ணீர் சேர்க்க வேண்டும். சரியான அளவு உப்பு சேர்க்க வேண்டும். நன்கு கொதித்ததும் கரம் மசாலா, மிளகுத்தூள், புதினா, கொத்தமல்லி சேர்த்து இறக்கி பரிமாறவும்.


நீங்களும் வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. இட்லி ,தோசை ,சப்பாத்தி அப்புறம் சாதத்துக்கும் கூட வச்சி சாப்பிடறப்ப செம டேஸ்டா இருக்கும். இனியாவது மருந்து மாத்திரைகளை அவாய்ட் பண்ணிட்டு இந்த மாதிரியான ஹெல்த்தி உணவுகளை சாப்பாட்டில் எடுத்துக் கொள்வோம். வருமுன் காப்போம். நோயற்ற வாழ்வை  எதிர்கொள்வோம்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்