டெல்லி: பதஞ்சலி நிறுவனம் உச்சநீதிமன்ற உத்தரவுகளை காலில் போட்டு மிதிக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக மீண்டும் யோகா ராம்தேவ் மன்னிப்பு கேட்ட நிலையில் அதை முற்றிலும் நிராகரிப்பதாகவும், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த வழக்கில் மத்திய அரசு, உத்தரகாண்ட் மாநில அரசுக்கும் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ராம்தேவ், பாலகிருஷ்ணா ஆகியோரை நிறுவனர்களாகக் கொண்ட பதஞ்சலி நிறுவனம் பல்வேறு ஆயுர்வேத பொருட்களை தயாரித்து விற்று வருகிறது. இதுதொடர்பாக அது செய்துள்ள விளம்பரங்கள் பெரும் சர்ச்சையை எழுப்பின. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் பல்வேறு உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்திருந்த நிலையில், அவற்றை பதஞ்சலி நிறுவனம் காற்றில் பறக்கவிட்டது, கண்டு கொள்ளவில்லை.
இதையடுத்து ராம்தேவ் கோர்ட்டில் நேரில் ஆஜராகுமாறு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. இதையடுத்து பகிரங்க மன்னிப்பு கேட்டார் ராம்தேவ். ஆனால் அந்த மன்னிப்பை சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் நிராகரித்தது. இந்த நிலையில் நேற்று மீண்டும் மன்னிப்பு கேட்டு ராம்தேவ் தரப்பில் மனு செய்யப்பட்டது. தற்போது அதையும் உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இன்று உச்சநீதின்றம் இதுகுறித்து கடுமையான கருத்துக்களை வெளியிட்டது. நீதிபதிகள் ஹிமா கோலி, அமானுல்லா ஆகியோர் கூறுகையில், நாங்கள் கண்ணை மூடிக் கொண்டிருக்க பார்வையற்றவர்கள் இல்லை. இந்த வழக்கில் நாங்கள் பெருந்தன்மையாக நடந்து கொள்ள விரும்பவில்லை. உத்தரகாண்ட் அரசு, பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிராக கொஞ்சம் கூட செயல்படவில்லை. மத்திய அரசும் திருப்திகரமான பதில் மனுவை தாக்கல் செய்யவில்லை. ராம்தேவின் மன்னிப்பு என்பது ஒப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. அதை நாங்கள் நிராகரிக்கிறோம். கொடுத்த உறுதிமொழியை வேண்டும் என்றே அவர்கள் மீறியுள்ளனர்.
முதலில் இந்த மன்னிப்பை அவர்கள் மீடியாவுக்கு அனுப்பியுள்ளனர். கோர்ட்டுக்கு அனுப்பவில்லை. வெற்று விளம்பரமே அவர்களது நோக்கமாக இருந்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது என்று நீதிபதிகள் கோபமாக கூறினர்.
மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்
காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!
ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!
ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!
அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!
Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!
"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!
மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!
{{comments.comment}}