டெல்லி: தேர்தல் பாண்டுகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வெளியிட வேண்டும். அனைத்து விவரம் என்றால் ஒரு விவரத்தையும் நீங்கள் மறைக்கக் கூடாது. மறைக்கக் கூடியது என்று நீங்கள் கருதும் அனைத்தையும் வெளியிட வேண்டும். செவ்வாய்க்கிழமைக்குள் இதைச் செய்ய வேண்டும் என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு இன்று உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.
எல்லாவற்றையும் தாக்கல் செய்த பிறகு நாங்கள் ஒரு விவரத்தையும் மறைக்கவில்லை, எல்லாவற்றையும் வெளியிட்டு விட்டோம் என்ற பிரமாணப் பத்திரத்தையும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தலைவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு உத்தரவில் தெரிவித்துள்ளது.
தேர்தல் பாண்டுகள் தொடர்பான வழக்கில் பாண்டுகளின் எண்கள் உள்ளிட்ட சில விவரங்களை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வெளியிடவில்லை. இது கடும் கண்டனத்தை எழுப்பியது. சுப்ரீம் கோர்ட்டும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தேர்தல் பாண்டுகள் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் செயலில் நேர்மை இல்லை என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
தேர்தல் பாண்டுகளின் எண்களை ஏன் இன்னும் தாக்கல் செய்யவில்லை என்று தலைமை நீதிபதி கடுமையாக கேள்வி எழுப்பினார். இதையடுத்து வங்கியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, தேர்தல் பாண்டுகளின் எண்களை வெளியிடுவோம் என்று ஒப்புக் கொண்டார். இதையடுத்து தேர்தல் பாண்டுகள் குறித்த அனைத்து விவரங்களையும் செவ்வாய்க்கிழமைக்குள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். எதையும் மறைக்கவில்லை எல்லாவற்றையும் வெளிப்படுத்தி விட்டோம் என்ற பிரமாணப் பத்திரத்தை சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். வங்கி விவரத்தை வெளியிட்டதும் அதை தேர்தல் ஆணையம் தனது தளத்தி் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஸ்டேட் வங்கியிடம் உள்ள தேர்தல் பாண்டுகள் குறித்த ஒரு விவரத்தையும் மறைக்கக் கூடாது. எல்லாவற்றையும் வெளியிட வேண்டும் என்று தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}