"தலைவா.. நன்றி தலைவா"... ஜிகர்தண்டா குழுவைச் சந்தித்த ரஜினி.. ஹேப்பியான கார்த்திக் சுப்புராஜ்!

Nov 15, 2023,04:22 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தின் படக்குழுவினர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து மற்றும் பாராட்டை பெற்றுள்ளனர். இதை மிகப் பெருமையாக அனைவருடனும் பகிர்ந்து கொண்டுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.


தீபாவளியை முன்னிட்டு கடந்த 10ஆம் தேதி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் வெளியானது. இது அவர் ஏற்கனவே எடுத்து ஹிட் கொடுத்த ஜிகர்தண்டாவின் 2வது பாகம்தான். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று ஹிட் கொடுத்தது. இதில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.


இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பீட்சா படத்தின் மூலம் அறிமுகமாகி ஜிகர்தண்டா, பேட்ட உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இதில் ஜிகர்தண்டா டபுள் லேட்டஸ்ட் ஹிட்டாகியுள்ளது. இப்படத்தின் மூலம் கார்த்திக் சுப்புராஜ் படம் என்றாலேயே வித்தியாசமான கதை களத்தை கொண்ட படமாக தான் இருக்கும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறி இருக்கிறது.




படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக் குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ஜிகர்தண்டா 2 படம் ஒரு குறிஞ்சி மலர் என குறிப்பிட்டு கார்த்திக் சுப்புராஜின் அற்புதமான படைப்பு..சினிமா ரசிகர்கள் இதுவரைக்கும் பார்க்காத புதுமையான காட்சிகள். லாரன்ஸ் இப்படியும் நடிக்க முடியுமா என்ற பிரமிப்பை நமக்கு உண்டாக்குகிறது. எஸ் ஜே சூர்யா திரை உலகின் நடிகவேள் என குறிப்பிட்டு இருந்தார்


இந்நிலையில் தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்  திரைப்படத்தின் படக்குழுவினர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்று குரூப் போட்டோ எடுத்துள்ளனர். இதில் ரஜினி, ராகவா லாரன்ஸ், எஸ் .ஜே சூர்யா ,இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணர், மற்றும் உதவி இயக்குனர்கள் இடம் பெற்றனர். ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா இப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்ததை மிகவும் பாராட்டினாராம். குறிப்பாக எஸ்.ஜே. சூர்யாவுக்கு ரஜினி ஸ்பெஷலாக பாராட்டியுள்ளார்.


ஏற்கனவே இப்படத்தைப் பார்த்த நடிகர் தனுஷ் ,கார்த்திக் சுப்புராஜின் அருமையான படைப்பு.. அற்புதமான நடிப்பை தருவது எஸ் ஜே சூர்யாவிற்கு வழக்கமாகிவிட்டது. நடிகரான ராகவா லாரன்ஸ் புதிய அவதாரம் எடுத்துள்ளார் என குறிப்பிட்டது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்