கலிபோர்னியா: கூகுள் நிறுவனத்தில் இந்த ஆண்டு அதிக அளவிலான வேலையிழப்பு இருக்கும் என்று ஊழியர்களுக்கு இமெயில் மூலம் தகவல் கொடுத்துள்ளார் அதன் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை. இதுதொடர்பான செய்தியை வெர்ஜ் இதழ் வெளியிட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் செயலாக்கத்தை எளிமையாக்கவும், சில துறைகளில் கூடுதல் கவனம் செலுத்தவும் இந்த லே ஆப் அவசியமாகிறது என்று சுந்தர் பிச்சை விளக்கியுள்ளார். இதன் மூலம் கடந்த வருடம் போலவே இந்த வருடமும் அதிக அளவிலான லே ஆப்பில் கூகுள் ஈடுபடும் என்று ஊழியர்களிடையே அச்சம் எழுந்துள்ளது.
ஏற்கனவே பல்வேறு நிறுவனங்கள் செயற்கை நுன்னணறிவுத் தொழில்நுட்பத்துக்கு மாறத் தொடங்கி விட்டன. இயந்திரமயமாக்கலும் அதிகரித்து விட்டது. இதனால் ஏற்கனவே பலருக்கு வேலை போய்க் கொண்டுள்ளது. இந்த நிலையில் சுந்தர் பிச்சையின் இந்த கூற்று, மேலும் பீதியை ஏற்படுத்துவதாக உள்ளது.
அதேசமயம், வேலை நீக்கம் என்பது கடந்த ஆண்டு போல அதிகமாக இருக்காது என்றும், எல்லாத் துறைகளிலும் கை வைக்க மாட்டோம் என்றும் சுந்தர் பிச்சை விளக்கியுள்ளார். இந்த இமெயிலில் உள்ள பிற தகவல்கள் குறித்த விவரம் தெரியவில்லை. அதேசமயம் கூகுள் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் இந்த மெயில் அனுப்பப்பட்டுள்ளதால், அத்தனை பேரும் பீதியில் உறைந்துள்ளனராம்.
பார்க்கலாம் எத்தனை பேரின் வயிற்றில் கூகுள் மண்ணை அள்ளிப் போடப் போகிறது என்பதை.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}