சென்னை: தமிழ்நாட்டில் மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அதனால் வெப்பம் சற்று தணிய வாய்ப்புள்ளதாகவும் தனியார் வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டையும் தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக ஈரோடு, சேலம் போன்ற மாவட்டங்களில் 105 டிகிரி பாரன்ஹீட்டிற்கும் மேல் வெப்பம் வாட்டி எடுத்து வருகிறது. இது மட்டுமல்லாமல் நேற்றைய தினம் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹூட்டையும் தாண்டி வெயில் கொளுத்தி உள்ளது. இதனால் இப்பகுதி முழுவதும் வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் கடும் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களாக வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் மே மாதத்தில் வரும் அக்னி நட்சத்திரத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் இருந்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டு மக்களுக்கு தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் நல்ல செய்தி ஒன்றை கூறியுள்ளார். இதுகுறித்து அவர்க கூறுகையில், மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் ஈரோடு, சேலம், தர்மபுரி, ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அந்த சமயத்தில் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை எதிர்பார்க்கலாம். அதே நேரத்தில் பெங்களூரிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
இதற்கிடையே, வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருப்பதால் மக்களும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. நிறைய தண்ணீர் குடியுங்கள்.. அதிகம் வெளியில் அலையாதீர்கள். தேவை ஏற்பட்டால் மட்டுமே வெளியே செல்லுங்கள். பழங்கள் அதிகம் சாப்பிடலாம். பருத்தி உடைகளையே அதிகம் அணியுங்கள். வீட்டில் உள்ள பெரியவர்கள் குழந்தைகள் போதிய அளவு தண்ணீர், மோர் போன்றவை குடிப்பதை உறுதி செய்யுங்கள். பீதி அடையத் தேவையில்லை. மாறாக, கவனமாக இருந்து கொள்ளுங்கள். அது போதும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}