கொழும்பு: இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இறுதியாக 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் போட்டியிட்ட கோத்தபாய ராஜபக்சே பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்றார். ஆனால் இவர் பொறுப்பேற்ற பின் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. இதனால் மக்கள் இலங்கை அரசுக்கு எதிராகவும், அதிபருக்கு எதிராகவும் போர் கொடி ஏந்தினர்.
இதன் காரணமாக அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் கோத்பாய ராஜபக்சே. பின்னர் அமைச்சர்களின் ஆதரவுக்கு இணங்க கடந்த 2022 ஆம் ஆண்டு இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடையும் நிலையில், செப்டம்பர் 21ஆம் தேதி இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என இலங்கை நாட்டின் தேர்தல் ஆணையம் ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
அதன்படி இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கிய ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு அமைதியான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இது ஒன்பதாவது அதிபர் தேர்தலாகும். விருப்ப வாக்கு அடிப்படையில் நடைபெறும் இந்த வாக்கு பதிவில் ஒரு கோடியே 70 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.
ரணில் விக்ரமசிங்கே சுயேட்சையாக போட்டியிடுகிறார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, இடதுசாரி ஜனதா விமுக்தி பெரமுனா தலைவர் அனுரா குமாராவும் களம் காண்கின்றனர். மேலும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சாவின் மகள் நமல் ராஜ்பக்ச உட்பட 38 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து இரவு 7 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. இந்த தேர்தலில் 50 சதவீதத்துக்கு மேல் வாக்கு பெற்றவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார். நாளை மதியத்திற்குப் பிறகு இலங்கையின் ஜனாதிபதி யார் என்பது அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மக்கள் ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். கொழும்பில் உள்ள வாக்குச்சாவடியில் ரணில் விக்ரமசிங்கே தனது குடும்பத்தாருடன் சென்று வாக்களித்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!
சபரிமலையில் நடிகர்கள் கார்த்தி ரவி மோகன் சுவாமி தரிசனம்!
Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!
அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்
குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!
good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?
என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!
{{comments.comment}}