இலங்கை.. அடுத்த ஜனாதிபதி யார்.. விறுவிறுப்பான வாக்குப் பதிவு.. வெல்வாரா ரணில் விக்கிரமசிங்கே?

Sep 21, 2024,11:58 AM IST

கொழும்பு:   இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இறுதியாக 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் போட்டியிட்ட கோத்தபாய ராஜபக்சே பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்றார். ஆனால் இவர் பொறுப்பேற்ற பின் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. இதனால் மக்கள் இலங்கை அரசுக்கு எதிராகவும், அதிபருக்கு எதிராகவும் போர் கொடி ஏந்தினர். 




இதன் காரணமாக அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் கோத்பாய ராஜபக்சே. பின்னர் அமைச்சர்களின் ஆதரவுக்கு இணங்க கடந்த 2022 ஆம் ஆண்டு இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின்  பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடையும்  நிலையில், செப்டம்பர் 21ஆம் தேதி இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என இலங்கை நாட்டின் தேர்தல் ஆணையம் ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பை  வெளியிட்டிருந்தது.


அதன்படி இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கிய ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு அமைதியான முறையில்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இது ஒன்பதாவது அதிபர் தேர்தலாகும். விருப்ப வாக்கு அடிப்படையில் நடைபெறும் இந்த வாக்கு பதிவில் ஒரு கோடியே 70 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.


ரணில் விக்ரமசிங்கே சுயேட்சையாக போட்டியிடுகிறார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, இடதுசாரி ஜனதா விமுக்தி பெரமுனா தலைவர் அனுரா குமாராவும் களம் காண்கின்றனர். மேலும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சாவின் மகள் நமல் ராஜ்பக்ச உட்பட 38 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.


விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து இரவு 7 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. இந்த தேர்தலில் 50 சதவீதத்துக்கு மேல் வாக்கு பெற்றவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார். நாளை மதியத்திற்குப் பிறகு இலங்கையின் ஜனாதிபதி யார் என்பது அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில் மக்கள் ஆர்வத்துடன் தங்கள்  வாக்குகளை செலுத்தி வருகின்றனர். கொழும்பில் உள்ள வாக்குச்சாவடியில் ரணில் விக்ரமசிங்கே தனது குடும்பத்தாருடன் சென்று வாக்களித்தார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தென் மாவட்டங்களுக்கு.. தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. புதன் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்

news

பொது இடத்தில் கட்டுக்கடங்காத கோபம் வருதா.. கன்ட்ரோல் பண்ண முடியலையா.. இதைப் படிங்க!

news

குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் அறுத்த விவகாரம்.. போலீஸ் விசாரணை தொடங்கியது

news

மாமல்லபுரத்தில் செக்யூரிட்டியை சரமாரியாக தாக்கிய குடும்பம்.. 2 பெண்கள் உள்பட 3 பேர் அதிரடி கைது!

news

முதல்வரும், துணை முதல்வரும் எத்தனை முறை வந்தாலும்.. சேலம் அதிமுகவின் கோட்டை.. எடப்பாடி பழனிச்சாமி

news

தீபாவளி 2024 ஸ்பெஷல்.. அமுதம் அங்காடிகளில்.. ரூ. 499க்கு 15 பொருட்கள்.. அப்படியே செட்டா வாங்கலாம்!

news

BSNL லோகோ மாறிப் போச்சு.. அது மட்டுமா.. 7 புதிய சேவைகளும் அறிமுகம்!

news

64 சிசிடிவி கேமராக்கள்.. 7 பாதுகாப்பு கோபுரங்கள்.. தி.நகரில் தீயாய் வேலை செய்யும் சென்னை போலீஸ்!

news

என்ன நண்பா விக்கிரவாண்டிக்கு கிளம்பலாமா.. த.வெ.க. மாநாட்டு பணிகள் 90% முடிந்தன!

அதிகம் பார்க்கும் செய்திகள்