மக்களே மகிழ்ச்சி செய்தி.. பொங்கலுக்காக.. தாம்பரத்தில் இருந்து நெல்லை, தூத்துக்குடிக்கு ஸ்பெஷல் ரயில்

Jan 10, 2024,06:43 PM IST

சென்னை: பொங்கலை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


பொங்கலை முன்னிட்டு தொடர் விடுமுறை வருவதினால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதினால், பஸ் மற்றும் ரயில் போக்குவரத்தில் கூட்டம் அதிகம் இருக்கும். இந்த கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தெற்கு ரயில்வே ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.


பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை டூ தூத்துக்குடி இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும், தாம்பரம் டூ நெல்லை இடையே முன்பதிவுடன் கூடிய சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும்  தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு:




திருநெல்வேலிக்கு முன்பதிவு ரயில்


தாம்பரத்திலிருந்து ஜனவரி 11, 13 மற்றும் ஜனவரி 16ம் தேதிகளில்  நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். தாம்பரத்தில் இரவு 9.50க்கு புறப்படும் ரயில் விருத்தாச்சலம், திருச்சி, மதுரை, விருதுநகர் வழியாக நெல்லை செல்லும். மறு மார்க்கத்தில் (ஜனவரி 12, 14, 17ம் தேதிகள்) பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் ரயில் அதிகாலை 3.15 மணிக்கு சென்னை வந்தடையும். தாம்பரத்திலிருந்து நெல்லை செல்லும் சிறப்பு ரயிலில் பயணிக்க பயணிகள் இன்றிலிருந்து முன் பதிவு செய்யலாம்.


தூத்துக்குடிக்கு முன்பதிவில்லாத ரயில்


சென்னை தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு முன் பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். சென்னை தாம்பரத்திலிருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 14 மற்றும் ஜனவரி 16ல்) சிறப்பு ரயில் தூத்துக்குடி செல்லும். கடலூர்,  மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை வழியாக தூத்துக்குடிக்கு முன்பதிவில்லாத ரயில் இயக்கப்படுகிறது. 


தாம்பரத்திலிருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் கடலூர் மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி வழியாக இரவு 10.45 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும். மறு மார்க்கத்தில் ஜனவரி 15 , 17ம் தேதி ஆகிய தேதிகளில் தூத்துக்குடியிலிருந்து காலை 6 மணிக்குப் புறப்பட்டு இரவு 8.30க்கு தாம்பரம் வந்தடையும்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்