தைப் பொங்கலும் வருது.. தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Jan 08, 2025,06:49 PM IST

சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 10ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பல்வேறு இடங்களில் வேலை படிப்பு காரணங்களுக்காக தங்கியிருப்பவர்கள் தங்கம் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பார்கள். அதனை ஒட்டி ரயில், பேருந்து, விமான நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். 


இதனை சரி செய்யும் விதமாக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு விமானங்கள் இயக்கப்படும். அதன்படி, தெற்கு ரயில்வே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 




பெங்களூரு- சென்னை


ஜனவரி 10ம் தேதி   07319 என்ற எண் கொண்ட சிறப்பு ரயில் பெங்களூருவில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்பட்ட பிற்பகல் 2.40க்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலைத்தை அடையும். அன்றைய தினமே சென்னையில் இருந்து பிற்பகல் 3.40 மணிக்கு புறப்படும்  07320 என்ற எண் கொண்ட ரயில் இரவு 10.50க்கு பெங்களூருவை சென்றடையும்.


பெங்களூரு-தூத்துக்குடி


ஜனவரி 10ம் தேதி 06569 என்ற எண் கொண்ட சிறப்பு ரயில் பெங்களூருவில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் ஜனவரி 11 சனிக்கிழமை  காலை 11 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும். அதே ரயில் மறுமார்க்கமாக சனிக்கிழமை பிற்பகல் 1மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு ஜனவரி 12 ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு மைசூரு வரை செல்லும்.


எர்ணாகுளம்-சென்னை


ஜனவரி 19ம் தேதி எர்ணாகுளத்தில் இருந்து மாலை 6.15க்கு புறப்படும் 06046 என்ற எண் கொண்ட ரயில்  மறுநாள் ஜனவரி 17ம் தேதி காலை 8.30 மணிக்கு சென்னை சென்றடையும். மறுமார்க்கமாக ஜனவரி 17ம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்படும் ரயில் 06047 என்ற எண் கொண்ட ரயில் இரவு 1 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.


திருவனந்தபுரம்-சென்னை


ஜனவரி 15ம் தேதி திருனவந்தபுரத்தில் இருந்து காலை 4.25க்கு புறப்படும் 06058 என்ற எண் கொண்ட ரயில் இரவு 11 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடையும். மறுமார்க்கமாக ஜனவரி 16ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் 06047 என்ற எண் கொண்ட ரயில் இரவு 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Gold Rate strikes twice: தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை.. காலையில் ரூ. 520.. மாலையில் ரூ.960 உயர்வு

news

மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை சென்னை வருகிறார்..யாரை எல்லாம் சந்திக்க திட்டம்?

news

தேசியவாதியான ஐயா குமரி ஆனந்தன் மறைவு தமிழகத்துக்கும் இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு: அண்ணாமலை

news

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பா..? வானிலை மையம் விளக்கம்!

news

நீட் எதிர்ப்பு என்பது... முதல்வர் ஆடும் சுயநல நாடகம்: பாஜக தலைவர் அண்ணாமலை!

news

நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்.. குமரி அனந்தன் குறித்து டாக்டர் தமிழிசை உருக்கம்!

news

இலக்கியச் செல்வர்.. காங்கிரஸ் மூத்த தலைவர்.. காமராஜரின் சிஷ்யர்.. மறைந்தார் குமரி அனந்தன்!

news

மதுரை குலுங்க.. வைகை ஆற்றில் கள்ளழகர்.. வந்திறங்க போறாரு.. வெளியானது தேதி!

news

உலகமே எதிர்பார்க்கும் அஜித்தின் குட் பேட் அக்லி நாளை வெளியீடு.. உற்சாகத்தில் ரசிகர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்