கும்பாபிஷேகம், தைப்பூசம் எதிரொலி.. பழனிக்கு 5 நாட்கள் சிறப்பு ரயில்கள்

Jan 27, 2023,10:10 AM IST
மதுரை: பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூசத் தொடக்க விழாவையொட்டி பழனிக்கு 5 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.



பழனியில் இன்று மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. அதேபோல ஞாயிற்றுக்கிழமை தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி பழனிக்கு மதுரை, திண்டுக்கல், கோவையிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 நாட்களுக்கு இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். நேற்று முதல் இவை தொடங்கியுள்ளன.

மதுரையிலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு, சோழவந்தான், கொடைரோடு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் வழியாக 12.30 மணிக்கு பழனி வந்தடையும்.

பழனியில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு மதுரை சென்றடையும்.

கோவை-திண்டுக்கல் சிறப்பு ரயில் காலை 9.20 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம் வழியக 11.38 மணிக்கு பழனி வந்து சேரும். மறுமார்க்கத்தில் பழனியில் இருந்து 11.43 மணிக்கு புறப்பட்டு ஒட்டன்சத்திரம் வழியாக 1 மணிக்கு திண்டுக்கல் போய்ச் சேரும். 

திண்டுக்கல்லில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.55 மணிக்கு பழனி வந்து சேரும். மறுமார்க்கத்தில், 3 மணிக்கு பழனியில் இருந்து புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு கோவையை சென்றடையும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்