அடுத்த படத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் ரெடி.. ஹீரோ யார் தெரியுமா.. சூப்பர் அறிவிப்பு!

Sep 25, 2023,04:38 PM IST

சென்னை: தமிழ் சினிமா உலகின் முன்னணி இயக்குனர்களில்  ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் பெரிய இடைவெளிக்குப் பிறகு  மீண்டும் இயக்கத்தில் பிசியாகவுள்ளார்.


சிவகார்த்திகேயனை வைத்து தனது புதிய படத்தை இயக்க உள்ளார் முருகதாஸ். இதனை சிவகார்த்திகேயனே தனது டிவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.




தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். விஜயகாந்த்தின் ரமணா, சூர்யாவின் கஜினி, 7ஆம் அறிவு, விஜய்யின் துப்பாக்கி, கத்தி, சர்கார், ரஜினியின் தர்பார் உள்ளிட்ட பல முன்னனி நடிகர்களின் படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்குவதோடு மட்டுமல்லாமல் படங்களையும் தயாரித்தும் வருகிறார்.


இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி இவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் அவரது அடுத்த படத்தின் தகவலையும் வெளியிட்டுள்ளார். அதன்படி, சிவகார்த்திகேயன் நடிக்கும் 23வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளதாக சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தகவலை தெரிவித்துள்ளார்.




இந்த படம் குறித்து சிவகார்த்திகேயன், எனது 23வது படத்துக்காக உங்களுடன் இணைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் சொன்ன கதையைக் கேட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன். இந்த படம் எனக்கு எல்லா அம்சங்களிலும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். மேலும் படப்பிடிப்பை தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். 


இந்தப் படத்தின் கதையை முதலில் ஏ.ஆர்.முருகதாஸ் ஷாருக்கானிடம் சொல்லி இருக்கிறார். அதற்கு ஷாருக்கானும் ஓகே சொல்லியிருக்கிறார். ஏதோ காரணத்தினால் அவர் நடிக்க முடியாமல் போக, அந்தக் கதையைத்தான் சிவகார்த்திகேயனை வைத்து முருகதாஸ் இயக்குகிறார் என்று தகவல் கசிந்துள்ளன.


ஏ.ஆர். முருகதாஸ் கடைசியாக இயக்கிய சில படங்கள் சரியாக போகவில்லை என்ற பேச்சு இருந்தது. இதனால் வலுவான கதையுடன் அடுத்து களம் இறங்க திட்டமிட்டிருந்தார் முருகதாஸ். இந்த நிலையில் ஹாட்டான நடிகர் சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கிறார் முருகதாஸ்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்