சென்னை மெட்ரோ ரயில் அதிகாரியுடன் வாக்குவாதம்.. சரமாரி தாக்குதல்.. பாடகர் வேல்முருகன் கைது!

May 13, 2024,01:34 PM IST

சென்னை: பிரபல பாடகர் வேல்முருகன் மெட்ரோ ரயில் நிலைய அதிகாரியிடம் விதிமுறைகளை மீறி தாக்குதலில் ஈடுபட்டதாக அவரை போலீசார் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.


சென்னை விருகம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக அப்பகுதியில் உள்ள ஆற்காடு சாலையில் வாகனங்கள் செல்லக்கூடாது என பேரிகார்ட் போட்டு தடுக்கப்பட்டுள்ளது.  இதனால் ஆர்காடு சாலை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. 


இந்த நிலையில், ‌நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு விருகம்பாக்கம் ஆற்காடு சாலை  சிக்னல் அருகே பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு போடப்பட்டிருந்த பேரிகார்டை நகர்த்தி விட்டு காரில் செல்ல முயன்று உள்ளார்.

அங்கிருந்த மெட்ரோ ரயில் பணி நிறுவனத்தின் மேலாளர் வடிவேல், வேல்முருகன் செய்த செயலை பார்த்துள்ளார். பின்னர் வேல் முருகனிடம் சென்று மெட்ரோ பணிகள் நடந்து வருவதால் வாகனங்கள் இப்பகுதிகளில் செல்லக்கூடாது எனக் கூறினார். 




அதிகாரியின் வார்த்தைகளை கேட்காமல் வேல்முருகன் விதிகளை மீறி அப்பகுதிக்குச் செல்ல முயன்றுள்ளார்.அப்போது வேல்முருகனுக்கும் உதவி மேலாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. அப்போது, கோபமடைந்த வேல்முருகன், மெட்ரோ ரயில் அதிகாரியை கடும் வார்த்தைகளால் பேசியுள்ளார். பின்னர் சரமாரியாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. 


இதில் அதிகாரிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் ஓடி வந்து அதிகாரியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அதிகாரி வடிவேல் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  புகாரின் அடிப்படையில் பின்னணிப் பாடகர் வேல்முருகன் மீது அதிகாரியை தாக்கிய வழக்கில் பிரபல பாடகர் வேல்முருகனை  போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்