சிங்கப்பூரில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா... மாஸ்க் கட்டாயம்

Dec 24, 2023,09:31 AM IST

சிங்கப்பூர் : சிங்கப்பூரில் தற்போது கொரோனா பரவல் உச்சத்தில் இருப்பதால் மாஸ்க் அணிவது அந்நாட்டில் கட்டாயமாக்கப்பட உள்ளதாக சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சர் mயே குங் (ong ye kung) தெரிவித்துள்ளார்.


கடந்த நான்கு வாரங்களாக சிங்கப்பூரில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நவம்பர் 12 முதல் 18 வரையிலான காலத்தில் 10,726 ஆக இருந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை டிசம்பர் 10 முதல் 16 வரையிலான காலத்தில் 58,300 ஆக அதிகரித்துள்ளது. இந்த முறை சிங்கப்பூரில் கொரோனா பரவல் உச்சம் தொடும் என அங்குள்ள ஆசிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன. மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள கூடுதல் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருவதாக சொல்லப்படுகிறது.




தற்போது வரப்போகும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகள் கொரோனா பரவலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் சிங்கப்பூர் மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். மாஸ்க் அணிவது கட்டாயம். உடல் நல பாதிப்பு உள்ளவர்கள் வெளியில் வராமல் வீட்டிலேயே இருக்க வேண்டும். சரியான தேதியில் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும். குறிப்பாக வயதானவர்கள் அல்லது உடல்நலம் குன்றியவர்கள் வருடத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். கொரொனா பரவலை பொறுத்து இனி வரும் நாட்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்படும். கொரோனா தடுப்பு மருந்துகளை அதிக அளவில் வைத்துக் கொள்ள மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


அதே சமயம் கடந்த 7 நாட்களில் சேகரிக்கப்பட்ட புள்ளி விபரத்தின் படி சிங்கப்பூரில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது. டிசம்பர் 17 ம் தேதி கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 7730 ஆக இருந்த நிலையில், டிசம்பர் 18ம் தேதி 6820 ஆகவும், டிசம்பர் 19ல் இது 6530 ஆகவும் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. 


பொது இடங்களிலும், போக்குவரத்தின் போதும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தொரோனா பரவலை பொறுத்து மற்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும்  ஓங் யே குங் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசியின் வீரியம் ஒன்று முதல் ஒன்றரை ஆண்டு காலம் (அதாவது 18 மாதங்கள்) மட்டுமே நம்முடைய உடலில் இருக்கும் என்பதால், ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்