கோவை: கோவையில் உள்ள கே எம் சி எச் மருத்துவமனையில் ஒருவர் திருடன் முயன்றதாக கூறி, மருத்துவமனை ஊழியர்களே அவரை அடித்து கொலை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவர் தற்போது கோவை தாந்திமா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் ராஜா கோவை அடையாற்று சாலையில் உள்ள கே எம் சி எச் மருத்துவமனைக்குள் புகுந்து அங்கிருந்த இரும்பு கம்பிகளை திருட முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அவரை காவலாளிகள் தடுத்து நிறுத்தி சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயம் அடைந்த ராஜா மயக்கமடைந்தார். பின்னர் பதற்றம் அடைந்த மருத்துவமனை நிர்வாகிகள் அவரை அதே மருத்துவமனையில் அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ராஜா உயிரிழந்துள்ளார்.இது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இதனை தொடர்ந்து ராஜாவின் மனைவி தன் கணவரின் மரணத்திற்கு நியாயம் கேட்டு பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் கோவை மாநகர காவல் ஆணையர் ஸ்டாலின் தலைமையில், மருத்துவமனை நிர்வாகம் மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் ராஜா அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
பின்னர் கே எம் சி எச் மருத்துவமனை துணைத் தலைவர் நாராயணன், மருத்துவமனை ஊழியர்கள், காவலாளி உட்பட 15 பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ராஜாவின் குடும்பத்தார், ராஜா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்குச் சென்றதாகவும், அப்போது அங்கு அவரை தவறுதலாக தாக்கி கொலை செய்யப்பட்டதாகவும், கூறி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். மேலும் ராஜா அடித்து தான் கொலை செய்யப்பட்டாரா அல்லது என்ன காரணத்திற்காக மருத்துவமனைக்குள் வந்தார் என்ற விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக ESI மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்தப் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று மதியத்திற்கு மேல் தெரியவரும். அப்போது ராஜா எப்படி இறந்தார் என்ற தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}