மும்பை: இந்திய தேர்தல் ஆணையம் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திரபவார் கட்சிக்கு, கொம்பு இசைக் கருவியை ஊதும் மனிதன் சின்னத்தை தேரத்ல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் செல்வாக்கு மிகுந்த கட்சியாக திகழ்வது தேசியவாத காங்கிரஸ் கட்சி. இந்தக் கட்சியை கடந்த ஆண்டு ஜூலை 2 ந் தேதி அஜித் பவார் தனது ஆதரவு 8 எம்எல்ஏக்களுடன் உடைத்தார். பின்னர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா - பாஜக கூட்டணயில் இணைந்தார். அஜித் பவார் துணை முதல்வராகவும், அவரது ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டது.
அதன் பின்னர் தனது தலைமையிலான தேசியவாத காங்கிரஸ்தான் உண்மையான கட்சி, என்று கூறி சின்னம் மற்றும் கட்சி பெயருக்கு உரிமை கோரினார். இதையடுத்து அஜீத் பவாருக்கு எதிராக சரத்பவாரும் களம் குதித்தார். இந்த சண்டை காரணமாக, தேர்தல் ஆணையம் தலையிட்டது. அஜீத் பவார் தலைமையிலானதுதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்று கூறி கட்சிப் பெயரையும், தேரத்ல் சின்னத்தையும், அஜீத் பவாருக்கே ஒதுக்கி உத்தரவிட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சரத் பவாருக்கு அவரது கட்சியின் பெயரை தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திர பவார் என்ற பெயரைப் பயன்படுத்த அனுமதி அளித்தது தேர்தல் ஆணையம். தற்போது அவருக்கு கொம்பூதும் மனிதன் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. வருகிற 27ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் 6 மாநிலங்களவை தொகுதிக்கான தேர்தல் நடக்க உள்ளது. இதில் சரத்பவார் கட்சியும் போட்டியிட தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது கட்சி மறுபடியும் உடையுமா என்ற பரபரப்பான எதிர்பார்ப்பும் இப்போதே கிளம்பி விட்டது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}