மீண்டும் சிறையில் செந்தில் பாலாஜி.. 16ம் தேதி ஜாமீன் கோரி மனு

Aug 12, 2023,04:10 PM IST
சென்னை: அமலாக்கத்துறை விசாரணையைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஜாமீன் கோரி ஆகஸ்ட் 16ம் தேதி மனு செய்யப்படும் என்று அவரது வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.

பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. இந்த அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து அவர் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் அவரது கைது செல்லும் என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு அமலாக்கத்துறை கஸ்டடிக்கும் அது அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து சென்னை செஷன்ஸ் கோர்ட், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கஸ்டடிக்கு அனுமதி அளித்தது. அதன் பேரில் செந்தில் பாலாஜியைக் கஸ்டடியில் எடுத்த அமலாக்கத்துறை அவரை கடந்த 5 நாட்களாக விசாரித்து வந்தது.

விசாரணை முடிந்ததைத் தொடர்ந்து இன்று அவர் நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஆகஸ்ட் 25ம் தேதி வரை சிறைக் காவலில் வைக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டார். மேலும் செந்தில் பாலாஜி மீது இன்று ஒரு குற்றப் பத்திரிக்கையும் பதிவு செய்யப்பட்டது. அதில் அவரது பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

இதற்கிடையே, செந்தில் பாலாஜியை ஜாமீனில் எடுக்க ஆகஸ்ட் 16ம் தேதி மனு செய்யப்படும் என்று அவரது வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்