ஊட்டி போற பிளான் இருக்கா.. உடனே கேன்சல் பண்ணுங்க.. வண்டியை நேரா அண்ணா பிளை ஓவருக்கு திருப்புங்க!

Feb 06, 2024,06:36 PM IST

சென்னை: சென்னை மக்களே.. "ஃபிளவர் ஷோ" பார்ப்பதற்காக, கொடைக்கானலுக்கோ, ஊட்டிக்கோ போற பிளான் இருக்கா.. தயவு செஞ்சு அதை கேன்சல் பண்ணிடுங்க.. இங்கேயே இருங்க.. உங்களைத் தேடி அழகழகான பூக்கள் சென்னைக்கே வந்தாச்சு!


"பூக்களே சற்று ஓய்வெடுங்கள்.. அவள் வந்து விட்டாள்".. எங்க?.. அதாங்க அண்ணா பிளை ஓவர் கிட்ட இருக்கே நம்ம செம்மொழிப் பூங்கா.. அங்கதான்!




சென்னை மக்கள் நீண்ட ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த சென்னை செம்மொழிப் பூங்கா மலர்க் கண்காட்சி இதோ வந்து விட்டது.. பிப்ரவரி 10ம் தேதி இந்த ஷோ தொடங்கவுள்ளது. வழக்கமாக கோடை வாசஸ்தலங்களில்தான் மலர்க் கண்காட்சி நடைபெறும். அதிலும் ஊட்டி மலர்க் கண்காட்சி மிகப் பிரபலமானது. 


ஆனால் வெயிலின் 2வது தலைநகரான சென்னையிலும் அவ்வப்போது மலர்க் கண்காட்சி நடைபெறுவது, சம்மருக்காக  திகிலோடு காத்திருக்கும் சென்னை மக்களுக்கு ஒரு  திரில்லான ஆறுதலாக அமைந்துள்ளது. அப்படிப்பட்ட ஜில் ஜில் மலர்க் கண்காட்சி இந்த ஆண்டு செம்மொழிப் பூங்காவில் கோலாகலமாக தொடங்கவுள்ளது.


2010ம் ஆண்டு, மறைந்த முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டதுதான் செம்மொழிப் பூங்கா.  சென்னையின் மையப் பகுதியான அண்ணா சாலை, அண்ணா மேம்பாலம் அருகே உள்ள இடத்தில்தான் இந்த பிரமாண்டப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இடையில் நடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இந்தப் பூங்கா கவனிப்பாரற்றுக் கிடந்தது. தற்போது மீண்டும் திமுக ஆட்சியில் புத்துயிர் பெற்று பளிச்சென காட்சி தருகிறது.




இந்தப் பூங்காவில் நூற்றுக்கணக்கான பூ ரகங்கள் பார்வையாளர்களை வசீகரித்துக் கொண்டுள்ளன. ஊட்டி, பெங்களூரு போல ஒரு பொட்டானிக்கல் கார்டன் நமக்கெல்லாம் கிடைக்காதா என்று சென்னைவாசிகள் ஒரு காலத்தில் ஏங்கிக் கிடந்தனர். அவர்களின் மனம் கவரும் வகையில் மணம் வீசிக் கொண்டிருக்கிறது இந்த அழகிய பூங்கா.


கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடத்தப்பட்டது. இந்த வருடம் இந்த மாதமே வரவிருக்கிறது. இந்த முறை ஊட்டிக்கு நிகரான வகையில் மிகப் பிரமாண்டமான முறையில் மலர்கள் காட்சிக்குத் தயாராக இருக்கின்றன. ஒரு வகையில் பார்த்தால் இதுதான் சென்னையில் நடைபெறவுள்ள முதல் மிகப் பிரமாண்டமான லைவ் மலர்க்கண்காட்சி ஆகும். தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறை இதற்கு ஏற்பாடு செய்துள்ளது.




இந்த ஷோவைக் காண அனுமதிக் கட்டணம் உண்டு. பெரிய அளவில் எல்லாம் டிக்கெட் கிடையாதுங்க. நிறையப் பேர் வந்து பார்க்க வேண்டும் என்பதால் நாமினலாகத்தான் கட்டணம் நிர்ணயித்திருக்கிறார்களாம்.


தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 16 வகையான மலர் வகைகளைச் சேர்ந்த 12 லட்சம் மலர்கள் இங்கு கொண்டு வந்து வளர்க்கப்பட்டு இப்போது பூத்துக் குலுங்குகின்றன. கிட்டத்தட்ட 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பூங்காவில் எங்கு திரும்பினாலும் பூக்கள் பூக்கள் பூக்கள் மட்டுமே கலகலப்பாக காட்சி தருகிறது.


விதம் விதமான வடிவிலும் பூக்களை அலங்கரித்து வைத்துள்ளனர். மயில், யானை, வாத்து என விதம் விதமான வடிவங்களில் பூக்களை நாம் காண முடியும். கிட்டத்தட்ட ஒரு வார காலம் இந்த கண்காட்சி நடைபெறும் என்று தெரிகிறது. சென்னை வாசிகளே.. இந்த சம்மரை.. ஜம்முன்னு மலர்களோடு என்ஜாய் பண்ணத் தயாராகுங்க!

சமீபத்திய செய்திகள்

news

தென் மாவட்டங்களுக்கு.. தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. புதன் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்

news

பொது இடத்தில் கட்டுக்கடங்காத கோபம் வருதா.. கன்ட்ரோல் பண்ண முடியலையா.. இதைப் படிங்க!

news

குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் அறுத்த விவகாரம்.. போலீஸ் விசாரணை தொடங்கியது

news

மாமல்லபுரத்தில் செக்யூரிட்டியை சரமாரியாக தாக்கிய குடும்பம்.. 2 பெண்கள் உள்பட 3 பேர் அதிரடி கைது!

news

முதல்வரும், துணை முதல்வரும் எத்தனை முறை வந்தாலும்.. சேலம் அதிமுகவின் கோட்டை.. எடப்பாடி பழனிச்சாமி

news

தீபாவளி 2024 ஸ்பெஷல்.. அமுதம் அங்காடிகளில்.. ரூ. 499க்கு 15 பொருட்கள்.. அப்படியே செட்டா வாங்கலாம்!

news

BSNL லோகோ மாறிப் போச்சு.. அது மட்டுமா.. 7 புதிய சேவைகளும் அறிமுகம்!

news

64 சிசிடிவி கேமராக்கள்.. 7 பாதுகாப்பு கோபுரங்கள்.. தி.நகரில் தீயாய் வேலை செய்யும் சென்னை போலீஸ்!

news

என்ன நண்பா விக்கிரவாண்டிக்கு கிளம்பலாமா.. த.வெ.க. மாநாட்டு பணிகள் 90% முடிந்தன!

அதிகம் பார்க்கும் செய்திகள்