டெல்லி: நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக இரண்டு வாரத்தில் தேசிய தேர்வு முகமை பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில் நீட் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கு ஜூன் 23ஆம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என என்டிஏ அறிவித்துள்ளது.
கடந்த 4 ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. இதன் பின்னர் நீட் தேர்வு எழுதிய 1563 மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை தனியாக கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கியதை கண்டித்து மறு தேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை நீட் தேர்வுகள் தொடர்பான விவகாரத்தில் இரண்டு வாரத்தில் என் டி ஏ பதில் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், 6 மையங்களில் நீட் தேர்வு எழுதி கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும். இதன் முடிவுகள் 30ஆம் தேதிக்குள் வெளியிடப்படும். 1563 மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு வரும் ஜூன் 23ஆம் தேதி மறுத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பானையை இன்றே வெளியிட உள்ளதாகவும் தேசிய தேர்வு முகாம் அறிவித்துள்ளது.
மேலும் கருணை மதிப்பெண்களை தவிர்த்து 1563 மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் குறித்த தகவல்கள் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும். ஏற்கனவே நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் விரும்பினால் மறுதேர்வு நடத்த விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்
காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!
ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!
ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!
அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!
Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!
"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!
மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!
{{comments.comment}}