அமலாக்கத்துறை கைதுக்கு எதிர்ப்பு.. ஹேமந்த் சோரன் மனுவை.. சுப்ரீம் கோர்ட் டிஸ்மிஸ் செய்தது!

Feb 02, 2024,06:18 PM IST
டெல்லி: அமலாக்கத்துறை கைது நடவடிக்கையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை நாடாமல் இங்கு வந்தது ஏன் என்று ஹேமந்த் சோரனுக்கு கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட், அவரது மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் சில தினங்களுக்கு முன்பு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அங்கு புதிய ஆட்சி அமையவுள்ளது. சாம்பாய் சோரன் தலைமையிலான புதிய அரசு இன்று பதவியேற்கவுள்ளது.

இந்த நிலையில் தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து ஹேமந்த் சோரன், டெல்லி உச்சநீதிமநன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார் ஹேமந்த் சோரன்.  இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.. அப்போது, உயர்நீதிமன்றத்தைத்தானே நீங்கள் நாடியிருக்க வேண்டும். அங்கு ஏன் போகவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
]


அதற்கு ஹேமந்த் சோரன் சார்பில் ஆஜரான  வழக்கறிஞர் கபில் சிபல், இது ஒரு முதல்வராக இருந்தவர் தொடர்பான வழக்கு என்று கூறினார். அதைக் கேட்ட நீதிபதிகள், எல்லோருக்கும் சமமானது நீதிமன்றங்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு கோர்ட் என்று கிடையாது. உயர்நீதிமன்றமும் அரசியல் சாசனப்படிதான் இயங்குகின்றது என்று கூறிய நீதிபதிகள், உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு கூறி சோரன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதனால் சோரன் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தற்போது உயர்நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் சார்பில் மனு செய்யப்படும் என்று தெரிகிறது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்