பிறை தெரிந்தது.. சவூதி அரேபியா, வளைகுடா நாடுகளில் ரம்ஜான் கொண்டாட்டம்.. இந்தியாவில் நாளை!

Mar 30, 2025,04:59 PM IST

ரியாத்:  சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பிறை தெரிந்ததைத் தொடர்ந்து ஈத் உல் பிதர் எனப்படும் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் நாளை ரம்ஜான் கொண்டாடப்படவுள்ளது.


வழக்கமாக சவூதி அரேபியாவுக்கு அடுத்த நாள்தான் இந்தியாவில் ரம்ஜான் கொண்டாடப்படும். அந்த வகையில் இன்று சவூதியில் கொண்டாடப்படுவதால்  இந்தியாவிலும் நாளை ரம்ஜான் கொண்டாடப்படும். வளைகுடா நாடுகளில் இன்று கோலாகலமாக ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.




புனிதமான ரமதான் மாத முடிவைத்தான் ரம்ஜான் பண்டிகையாக கொண்டாடுகிறார்கள். 30 நாள் நோன்புக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 


இந்தியாவில் ரமதான் மாதம் மார்ச் 2ம் தேதி தொடங்கியது. அதேசமயம், சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் மார்ச் 1ம் தேதி நோன்பு தொடங்கியது.


இந்திாயவில் நாளை ரம்ஜான் கொண்டாடப்படவுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவிலும் நாளை ரம்ஜான் கொண்டாடப்படும் என்று அந்த நாட்டு இமாம்கள் கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நோட் பண்ணிக்கோங்க மக்களே... தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில் 10 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை!

news

கார்த்திகை விரதமும், சதுர்த்தி விரதமும் இணைந்து வரும் ஏப்ரல் 1

news

நான் ஏன் இப்படி??? (சிறுகதை)

news

உலகின் நீளமான நாக்கு .. கின்னஸ் சாதனை படைத்த.. அமெரிக்க பெண்..!

news

ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்கம் விலை... நேற்று சவரன் ரூ.67,000... இன்றோ ரூ.68,000!

news

Emburan Movie: பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துகளை நீக்குக.. பண்ருட்டி வேல்முருகன்..!

news

Madurai Chithirai Thiruvizha 2025: மீனாட்சி அம்மன் கோவிலில்..ஏப்ரல் 29ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..

news

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை மீண்டும் குறைவு..!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 01, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்