"ஒரு திருமுருகன் வந்து ஆங்கு.. உதித்தனன் உலகம் உய்ய".. தொடங்கியது சஷ்டி விரதம்!

Nov 13, 2023,03:32 PM IST
திருச்செந்தூர்: முருகனுக்குரிய விரதங்களுள் மிக முக்கியமானது கந்த சஷ்டி விரதம். ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை.பிரதமை தொடங்கி சஷ்டி வரை ஆறு நாட்களும் நோன்பிருந்து கந்த சஷ்டி விரதம் கடைபிடிக்க வேண்டும்.  அந்த சஷ்டி விரதம் இன்று தொடங்கியுள்ளது.

விரதம் இருந்து முருகனை வணங்கினால் தீராத நோய்கள் தீரும். திருமண பாக்கியம் கை கூடி வரும் புத்திரபாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது. கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை உண்டு விரதம் இருத்தல் வேண்டும். மதியம் மட்டும் உணவு உண்டு. காலை மாலை ஆகிய 2 வேளையும் பால் பழம் மட்டும் உண்ண வேண்டும்.

முருகனின் முகம் ஆறு ஆகும். சஷ்டி விரதமும் ஆறு நாள். ஆறு நாட்களும் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது. இந்த ஆறு நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்கள் சஷ்டி அன்று மட்டுமாவது எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. முருகனின் ஆறு படை வீடுகளில் ஒன்று திருச்செந்தூர்.  சஷ்டி விரதத்தின் ஆறாவது நாள் முருகப்பெருமான் சூரனை வதம் செய்த கோலத்தை தரிசனம் செய்துவிட்டு திருச்செந்தூரில் கடலில் நீராடுவர். மற்ற ஊர்களில் அவரவர் வீட்டிலோ, இதர நீர் நிலைகளிலோ நீராடவேண்டியது அவசியம்.



முருகனின் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்கியம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும். கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நல்லது. வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோஷமும் கைகூடி வரும்.  சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும்.

"அருவமும் உருவமாகி
அநாதியாய் பலவாய், ஒன்றாய்ப்
பிரம்மமாய் நின்ற ஜோதிப்
பிழம்பதோர் மேனியாகிக்
கருணைகூர் முகங்கள் ஆறும்
கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒரு திருமுருகன் வந்து ஆங்கு
உதித்தனன் உலகம் உய்ய!"

இது கந்தபுராணம்..  இந்தப் பாடலை உள்ளன்புடன் சொன்னால் குழந்தைப் பேறு பெறலாம். எனவே குழந்தை பாக்கியம் கிடைக்க பெறாதவர்களுக்கு  இது மிகவும் சிறந்த விரதமாகும். சஷ்டி விரதம் இருப்போம்.. முருகனின் திருவருளுடன், நலம் பல பெறுவோம்.

சமீபத்திய செய்திகள்

news

17 வருடங்களுக்குப்பின்.. சேப்பாக்கத்தில் வென்ற பெங்களூர்.. ஏமாற்றிய சிஎஸ்கே.. தோனியின் ஆறுதல் அதிரடி

news

TVK vs DMK.. முதல் முறையாக மோடி, மு.க.ஸ்டாலின் பெயர்களைச் சொல்லி ஆவேசம் காட்டிய விஜய்!

news

தளபதி பட்டம் போய்... வெற்றி தலைவர்... விஜய்க்கு புது பட்டம்!

news

தவெக ஆட்சி அமைந்ததும்.. பெண்கள் பாதுகாப்பை 100% உறுதி செய்வோம்.. விஜய் உறுதி!

news

ரூ போட்டு அலறச் செய்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் பேச்சு

news

திமுகவுடன் தான் நேருக்கு நேர் மோதல்.. அதிமுகவை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாத விஜய்!

news

மியான்மர் தொடங்கி தாய்லாந்து வரை.. அதிர வைத்த நிலநடுக்கம்.. கட்டடங்கள் பிளந்ததால் பரபரப்பு

news

வக்பு வாரிய சட்ட மசோதாவை திரும்பப் பெறுங்கள்.. தவெக பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள்!

news

சட்டப்பேரவையில் அமளி..அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட்!

அதிகம் பார்க்கும் செய்திகள்