அகர்தலா: திரிபுராவில் உள்ள ஒரு கல்லூரியில் சரஸ்வதி சிலையை ஆபாசமான கோலத்தில் வைத்திருந்ததாக கூறி, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
திரிபுரா தலைநகர் அகர்தலாவில், அரசு கலை மற்றும் கைவினை கல்லூரி உள்ளது. இங்குள்ள வளாகத்தில் சரஸ்வதி சிலை ஒன்று அமைந்துள்ளது. கடந்த புதன்கிழமை வசந்த பஞ்சமி அன்று சரஸ்வதி சிலைக்கு பூஜைகள் நடைபெற்றன.அப்போது பாரம்பரிய சேலை இல்லாமல் சரஸ்வதி சிலை ஆபாசமான கோலத்தில் இருப்பதாக கூறி சிலர் வீடியோவை வைரலாக்கினர்.
இதை இப்போது பாஜகவின் மாணவர் அணியான ஏபிவிபி பிரச்சினையாக்கியுள்ளது. சரஸ்வதி சிலை ஆபாசமாக இருப்பதாக கூறி அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஏபிவிபி அமைப்பின் இணைச் செயலாளர் திபாகர் ஆச்சார்ஜி கூறுகையில், சரஸ்வதி தேவியின் சிலையில் உள்ள சேலை அகற்றப்பட்டு சித்தரித்தது மிகவும் கொடூரமானது. இது மத உணர்வை புண்படுத்துவது என்றார்.
இந்த விவகாரம் குறித்து திரிபுரா கலை மற்றும் கைவினைப் கல்லூரி முதல்வர் அபிஷித் பட்டாச்சாரி கூறுகையில், இந்த சிலை வட மற்றும் தென்னிந்திய கோயில்களில் காணப்படும் சிலை அமைப்பை பின்பற்றியது. இதனால் நாங்கள் யாருடைய மனதையும் புண்படுத்தவில்லை. அவர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் சிலையை மாற்றி உள்ளோம் என கூறினார்.
தோனி அதிரடி.. கடைசி நேர போராட்டம் வீண்.. மீண்டும் ஒரு தோல்வி.. ஏமாற்றத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்
தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்
உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்
Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!
ஆளுநருக்கு எதிரான.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது.. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!
Summer Food tips.. அடிக்கும் அதிரடி வெயிலுக்கு.. கருப்பு கவுனி அரிசி மோர் கூழ் சூப்பரப்பு!
ஏப்ரல் 10.. சம்பவம் காத்திருக்கு.. குட் பேட் அக்லி படத்திற்கு.. யுஏ சான்றிதழ்.. ரசிகர்கள் வெயிட்டிங்
ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமாவமவன்!