சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023:  மேஷம் முதல் கன்னி ராசி வரை.. என்ன காத்திருக்கிறது?.. வாங்க பார்க்கலாம்

Dec 20, 2023,05:09 PM IST

சனிப்பெயர்ச்சி 2023 டிசம்பர் 20 ம் தேதி மாலை 05.20 மணிக்கு நடைபெறுகிறது. சனி பகவான் தனது சொந்த வீடான மகர ராசியில் இருந்து, மற்றொரு சொந்த வீடான கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.


சனிப் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்கு என்ன மாதிரியான பலன்களைக் கொடுக்கும், யாருக்கு என்ன மாதிரியான மாற்றம் வரும் என்பது குறித்து ராசி வாரியாக பார்க்கலாம்.


இன்று மேஷ ராசி முதல் கன்னி ராசி வரையிலான ஆறு ராசிக்காகரர்களுக்குரிய பலன்களைப் பார்ப்போம். நாளை மீதமுள்ள ஆறு ராசிக்காரர்களுக்கான பலன்களைப் பார்க்கலாம்.


மேஷ ராசி




பலனை எதிர்பார்க்காமல் தன்னுடைய கடமையை சிறப்பாக செய்யும் குணம் கொண்ட மேஷ ராசிக்காரர்களே, இதுவரை சனி பகவான் உங்களின் ராசிக்கு 10 ம் இடமான ஜீவன ஸ்தானத்திலே இருந்தார். இதனால் பண வருவதில் தடை, தேவையற்ற செலவுகள் ஆகியவற்றை கொடுத்துக் கொண்டிருந்தார். இந்த சனிப் பெயர்ச்சிக்கு பிறகு அவர் லாப ஸ்தானத்திற்கு மாற உள்ளார். லாப ஸ்தானத்திற்கு வரக் கூடி சனி பகவான் உங்களுக்கு அபமிதமான வளர்ச்சியை தருவார். இதனால் செய்யும் தொழில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் மனகசப்புகள், சக ஊழியர்களுடன் இருக்கக் கூடிய கருத்து வேறுபாடுகள் அனைத்தும் விலகும். அனைவரிடமும் சூகமான சூழல் ஏற்படும். இதுநாள் வரை ஏற்பட்டிருந்த தடைகள் அனைத்தும் இனி விலகும். 


சனி பகவான் உங்களுடைய ராசிக்கு 7ம் பார்வையாக சிம்ம ராசியையும், 3ம் பார்வையாக மேஷ ராசியையும், 10ம் பார்வையாக விருச்சிக ராசியையும் பார்க்கிறார். இதனால் உங்களுக்கும் உங்கள் சகோதரர்களுக்கும் இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண தடைகள் விலகி, திருமணம் கைகூடுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்த வந்த மனக்கவலைகள் அனைத்தும் காலம் இது. இருந்தாலும் ஒரு சிலருக்கும் கடன் வாங்கக் கூடிய சூழல் ஏற்படும். ஆனால் அதுவும் சுப காரியத்திற்காக வாங்குவதாக இருக்கும். சிலருக்கு அரசுத்துறையில் அந்த கடன் வாங்குவதற்கான வாய்ப்பு அமையும்.


மற்ற ராசிகளை விட இந்த சனிப்பெயர்ச்சியானது மேஷ ராசிக்கு தான் அதிக நன்மைகளை வழங்க போகிறது. குறிப்பாக அஸ்வினி நட்சத்திரத்தின் நான்கு பாதத்திற்கு உரியவர்களுக்கும் வாழ்க்கையில் மிகப் பெரிய வளர்ச்சியை இந்த சனிப் பெயர்ச்சி தரப் போகிறது. பரணி நட்சத்திரக்காரர்களுக்கு பல பிரயாணங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு வெளிநாட்டு பயணங்களும், அதன் மூலம் பல நன்மைகளும் ஏற்படப் போகிறது. திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் கை கூடும். 


கிருத்திகை நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சி, சமூகத்தில் நல்ல அந்தஸ்தை பெற்றுத் தரும். உறவினர்கள் மூலமாக புதிய தொழில் துவங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும். மேஷ ராசிக்காரர்கள் சனிப் பெயர்ச்சியால் கூடுதல் பலன்களை பெறுவதற்கு பார்வதி தேவியை வழிபடுவது சிறப்பு.


ரிஷப ராசி




தர்ம சிந்தனையும், இறை நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்கக் கூடிய ரிஷப ராசிக்காரர்களே, உங்களுக்கு இதுவரை 9 ம் இடத்தில் இருந்த சனி பகவான் அதிப்படியான பிரயாணங்கள், செலவுகள் ஆகியவற்றை கொடுத்திருப்பார். தற்போது 10 ம் இடமான ஜீவன ஸ்தானத்திற்கு சனி பகவான் பெயர்ச்சி அடைகிறார். இந்த ஜீவன சனியால் உங்களுக்கு பலவிதமான நன்மைகள் நடைபெற போகிறது. ஜீவ சனியால் பல துறைகளிலும் உங்களின் பார்வை விரிவடையும். இதனால் ஒன்று அல்லது அதற்கு மேற்கு துறைகளின் வழியாக உங்களுக்கு வருமானம் வரக் கூடியதற்கான ஆற்றலை நீங்கள் பெறுவீர்கள்.


புதிய வகையான தொழில் வாய்ப்புகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. சொந்த தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி, உத்தியோகம் பார்ப்பவர்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். வெளிநாடு செல்ல வேண்டும் என்ற ஆசை இருப்பவர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும். திருமணத் தடைகள் விலகும். குடும்பத்தில் சுப செலவுகள் சற்று அதிகமாக நடைபெறுவதற்கான வாய்ப்புள்ள உள்ளது. சனி பகவான் 3ம் பார்வையாக உங்களின் 12ம் வீட்டை பார்க்கிறார். அதனால் சுப செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். 


சப்தம பார்வையாக சனி பகவான் உங்களின் 4ம் வீட்டை பார்க்கிறார். இதனால் தாய் வழியில் புதிய சொத்துக்கள் சேருவதற்கான வாய்ப்பு ஏற்படும். உங்கள் ராசிக்கு 10ம் பார்வையாக 7ம் வீட்டை சனி பகவான் பார்ப்பதால் திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் கைகூடுவதற்கான சூழல் ஏற்படும். 


கார்த்திகை நட்சத்திரம் நான்கு பாதக்காரர்களுக்கும் உடல் உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். ரோகிணி நட்சத்திரக்காரர்கள் சகோதர சகோதரி மூலமாக ஆதரவுகளும், அதன் மூலம் நிதி வரவுகளும் கிடைக்கும். வாழ்வாதார உயர்வும் ஏற்படும்.


மிருகசீரிஷம் நட்சத்திரம் ஒன்று, இரண்டு பாதங்களில் பிறந்தவர்களுக்கு வெளியூர் பிரயாணங்கள், பல விதமான நிதி வரவுகள் ஏற்படுவது என பல நன்மைகள் ஏற்படும். 


ரிஷப ராசிக்காரர்கள் சனி பகவானையும், விநாயகரையும் வழிபட வேண்டும். விநாயகரை ஞாயிற்றுக்கிழமை அல்லது வளர்பிறை சதுர்த்தியில் வழிபடுவது சிறப்பானது. சங்கடஹர சதுர்த்தியில் வழிபட்டால் நன்மைகள் கிடைக்கும்.


மிதுனம் ராசி




ஞானமும், மற்றவர்களுக்கு உதவுவதில் தயாள குணம் கொண்ட மிதுன ராசிக்காரர்களே, இதுவரை சனி பகவான் உங்கள் ராசிக்கு அஷ்ட சனியில் இருந்தார். கடந்த ஆண்டு நடந்த சனிப் பெயர்ச்சியால் அதிகமாக கஷ்டப்பட்ட ராசிக்காரர்கள் என்றால் அது மிதுன ராசிக்காரர்கள் தான். ஆனால் தற்போது சனி பகவான் பாக்கிய ஸ்தானம் என சொல்லக் கூடிய பூர்வ புண்ணிய ஸ்தானமான 9ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார். இதுவரை அதிகமான கஷ்டப்பட்ட மிதுன ராசிக்காரர்கள், இனி அதிகமான நன்மைகளை அடைய போகிறீர்கள். பல விதமாக உங்களை வாட்டி வதைத்து வந்த கஷ்டங்கள் விலகும்.


9ம் ஸ்தானத்திற்கு வரும் சனி பகவான் கடன் பிரச்சனை, கணவன் - மனைவி பிரச்சனை ஆகியவற்றை தீர்க்க போகிறார். பணிபுரியும் இடத்தில் இருக்கக் கூடிய பலவிதமான மனக் கஷ்டங்களை நிவர்த்தி செய்யப் போகிறார். மனதிற்கு ஏற்றது போன்ற நல்ல வளர்ச்சியை கொடுக்க போகிறார். இதுவரை பல பிரயாணங்கள் செய்தும் அதற்கான பலனை அனுபவிக்க முடியாமல் போயிருக்கும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என நிலை இனி மாறி, முழு பலனையும் லாபத்தையும் அனுபவிக்க போகிறீர்கள். திருமணம், குழந்தை பாக்கியமும் கிடைக்க உள்ளது.


சனி பகவான் 3ம் பார்வையாக 11ம் இடத்தை பார்ப்பதால் லாபங்கள் கை கூடும். நீண்ட நாட்களாக இருக்கக் கூடிய ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். சப்தம பார்வையாக 3ம் வீட்டை சனி பகவான் பார்ப்பதால், சகோதரர்கள் மூலமாக பலவிதமான நன்மைகள் ஏற்படும். சகோதர வழியில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். 10ம் பார்வையாக 6ம் வீட்டை சனி பகவான் பார்ப்பதால் கடன்கள் தீரும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இருக்கும் உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கும். நல்ல வளர்ச்சி ஏற்படும். 


மிருகசீரிஷம் நட்சத்திரத்திரம் 3, 4 ஆகிய பாதங்களில் பிறந்தவர்கள் சனிப் பெயர்ச்சியால் தொழிலில் போட்டி ஏற்பட்டு, அந்த போட்டிகளில் வெற்றி பெறுவார்கள். கடுமையான முயற்சியால் வெற்றியை பெறுவார்கள். திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் பேச்சின் மூலமாக பலவிதமான சாதனைகள் புரிவதுடன், பலவிதமான பிரச்சனைகளில் இருந்தும் விடுபடுவார்கள். பொருளாதார வளர்ச்சியும் பெறுவார்கள். புனர்பூசம் நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பழைய முதலீட்டின் மூலம் புதிய லாபம் கிடைக்கும். 


மிதுன ராசிக்காரர்கள் மகாவிஷ்ணுவை வழிபாடு செய்ய வேண்டும். பெருமாளுக்குரிய விஷ்ணு சகஸ்ரநாதமத்தை பாராயணம் பண்ணலாம். அது முடியாதவர்கள் பெருமாளுக்குரி அஷ்டாச்சர மந்திரத்தை குரு மூலமாக உபதேசம்  வாங்கிக் கொண்டு பாராயணம் செய்யலாம். பெருமாளுக்கு சனிக்கிழமையில் துளசியால் அர்ச்சனை செய்வது நன்மை தரும்.


கடக ராசி




நல்ல அறிவும், இரக்க குணம், எந்த செயலை செய்தாலும் அதன் பலன்களை நன்றாக ஆராய்ந்து, எதிர்கால சிந்தனை கொண்ட கடக ராசிக்காரர்களே, சனி பகவான் உங்கள் ராசிக்கு இதுவரை 7ம் பாவமாக கண்ட சனியாக இருந்தார். இதனால் பல விதமான உடல் உபாதைகள், செலவுகள் ஏற்பட்டிருக்கும். தற்போது நடைபெறும் சனிப்பெயர்ச்சியின் மூலம் அஷ்டம ஸ்தானத்தில் அஷ்டம சனியாக இருக்க போகிறார். அஷ்டம சனி என்றாலே பல விதமான கஷ்டங்கள் ஏற்படும், கடுமையாக உழைக்க வேண்டும், அவப்பெயர்கள் ஏற்படும் என்பார்கள். ஆனால் அதற்காக பயப்பட வேண்டாம் . சனி பகவானுக்குரிய வழிபாட்டை முறையாக செய்து வந்தாலே பலவிதமான பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். 


கடக ராசிக்காரர்களுக்கு சனியின் பார்வையால் ஒரு சில நன்மைகளும் ஏற்படப் போகிறது. 2ம் பாவத்தை 7ம் பார்வையாக சனி பார்க்கிறார். இதனால் திருமணம் ஆக வேண்டியவர்களுக்கு திருமணம் நடைபெறும். 3ம் பார்வையாக 10ம் வீட்டை பார்ப்பதனால் வேலை இல்லாதவர்களுக்கு கூட வேலை கிடைக்கும். 10ம் பார்வையாக 5ம் பாவத்தை பார்க்கிறார். இதனால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். குழந்தைகளை விட்டு பிரிந்து இருப்பவர்கள் மீண்டும் ஒன்று சேருவதற்கான வாய்ப்பு ஏற்படும்.


அதே நேரம் வாகனம் ஓட்டும் போதும், கடன் வாங்கும் போதும், கடன் வாங்கியவர்களுக்காக ஜாமின் கையெழுத்து போடும் போதும் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். புதிய செயலில் ஈடுபடும் போதும், வாக்குறுதிகள் கொடுக்கும் போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 


புனர்பூசம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சனிப்பெயர்ச்சியான உத்தியோக உயர்வை தரும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெரியவர்களின் ஆசீர்வாதம், பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு, உறவினர்களின் ஆதரவு ஆகியன தகுந்த சமயத்தில் கிடைத்து பல உதவிகள் கிடைக்கும். பலவிதமான கஷ்டங்களை முயற்சியானிலே சமாளித்து முன்னேற்றம் காண்பீர்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அறிவு கூர்மையால் பலவிதமான சாதனை படைப்பீர்கள். உங்களுக்கு சாதமாக பல உபகரணங்களை பெற்றுக் கொள்வீர்கள். 


கடக ராசிக்காரர்கள் சிவ பெருமானை வழிபட வேண்டும். குறிப்பாக பிரதோஷ நேரத்திலே வழிபடுவதால் பல நன்மைகள் ஏற்படும்.


சிம்ம ராசி




சனிப்பெயர்ச்சி 2023 டிசம்பர் 20 ம் தேதி மாலை 05.20 மணிக்கு நடைபெறுகிறது. சனி பகவான் தனது சொந்த வீடான மகர ராசியில் இருந்து, மற்றொரு சொந்த வீடான கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.


நிர்வாக திறமையும், மற்றவர்களை தங்கள் பக்க ஈர்க்கும் தன்மையும், சுற்றி இருப்பவர்களுக்கு பல விதமான நன்மைகளை செய்யக் கூடிய சிம்ம ராசிக்காரர்களே, உங்களுடைய ராசிக்கு மிக முக்கியமான கிரகம் என்றால் அது சனி பகவான். இதுவரை உங்களுடைய ராசியிலே சனி பகவான் 6ம் பாவத்திலே ரோக சனியாக இருந்தார். இதனால் பல விதமான உடல் உபாதைகள் ஏற்பட்டிருக்கும். குடும்பத்திலே மருத்துவ செலவுகள் அதிகரித்திருக்கும். தேவையற்ற விரத செலவுகளையும் கொடுத்திருப்பார். 


தற்போது நடக்கும் சனிப்பெயர்ச்சியால் 7ம் இடத்தில் கண்ட சனியாக சனி பகவான் அமர்கிறார். இதனால் சில உடல் உபாதைகள் ஏற்பட்டு மறையும். இருந்தாலும் சனி பகவானை வழிபட்டு வந்தால் அதிலிருந்து விடுபட முடியும். சனி பகவான் நேரடியாகவும், மறைமுகமாகவும் உங்களுக்கு பல நன்மைகளையும் வழங்க உள்ளார். சனி பகவான் சப்தம பார்வையாக உங்களின் ஜென்ம ஸ்தானத்தை பார்ப்பதால் முன்பை விட நல்ல மன உறுதியுடன் காணப்படுவீர்கள். 3ம் பார்வையாக 9வது இடத்தை பார்ப்பதால் பூர்வீக சொத்துக்கள் உங்களுக்கு வருவதில் இருக்கும் சிரமங்கள், தடைகள் விலகும். 10 ம் பார்வையாக 4ம் வீட்டை பார்ப்பதால் புதிய சொத்துக்கள் சேருவதற்கும், புதிய வாகனங்கள் வாங்குவதற்கும் வாய்ப்புகள் அமையும்.


திருமண, குழந்தை பாக்கியம் ஆகியவற்றை தருவதுடன், கூட்டுத் தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசையில் இருப்பவர்களுக்கு கூட்டு தொழில் வாய்ப்பையும் சனி பகவான் ஏற்படுத்தி தரப் போகிறார். தேவையற்ற விரய செலவுகள் குறையும். அதிப்படியாக லாபத்தை கிடைத்த போதிலும் அதற்காக நீங்கள் அதிக நேரம் செலவிட வேண்டி இருக்கும். உடல் உழைப்பையும் அதிகமாக கொடுக்க வேண்டி வரலாம். 


மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு லாபங்கள் பல மடங்காக உயரும். திருமணம் கை கூடும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தொழில் ஸ்தானம் தொடர்பான அறிவு வளர்ச்சிகள் ஏற்படும். மேல்படிப்பு படிக்க வேண்டும் என ஆசைப்படுபவர்களுக்கு மேல் படிப்பிற்கான வாய்ப்பு அமையும்.  உத்திரம் நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும். வம்ச அபிருவித்திகான செய்திகளும் கிடைக்கும்.


சனிப்பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் துர்கா தேவியை வழிபட வேண்டும். வெள்ளிக்கிழமையில் துர்க்கையை வழிபடுவதால் நன்மைகள் அதிகமாகவே கிடைக்கும் . லாபங்கள் கை கூடும். சிம்ம ராசிக்காரர்கள் பெண் தெய்வ வழிபாடு செய்வது மிக முக்கியமானதாகும்.


கன்னி ராசி




சனிப்பெயர்ச்சி 2023 டிசம்பர் 20 ம் தேதி மாலை 05.20 மணிக்கு நடைபெறுகிறது. சனி பகவான் தனது சொந்த வீடான மகர ராசியில் இருந்து, மற்றொரு சொந்த வீடான கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.


விட்டுக் கொடுத்து செல்லும் குணமும், அனைவரிடமும் சுமூக உறவை ஏற்படுத்திக் கொள்ளும் மனப்பக்குவமும் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு இதுவரை 5 ம் இடத்தில் இருந்தார் சனி பகவான். சனி பகவான் மட்டுமின்றி பிற கிரகங்களும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக சாதகமாக இல்லை. நன்மைகள் ஏற்பட தடையாகவே இருந்தன. தற்போது நடைபெற போகும் சனிப்பெயர்ச்சியால் சனி பகவான் 6ம் பாவத்திற்கு வருகிறார். 6ம் இடத்தில் ரோக சனியாக வரப் போகிறார். இதனால் எதிரிகள் உருவாவார்களா என பயப்பட தேவையில்லை. உங்களுடைய எதிரிகளுக்கு தான் சனி பகவான் கெடுதலை ஏற்படுத்துவார். உங்களுக்கு பல நன்மைகளை தான் சனி பகவான் வழங்க உள்ளார்.


தேவையற்ற விரய செலவுகள் குறையும். எதிரிகள், உங்களை எதிர்ப்பவர்கள் அழிவார்கள். பல நாட்களாக உங்களால் அடைக்கவே முடியாது என நினைத்திருந்த எப்பேர்பட்ட கடனையும் அடைப்பதற்கான வாய்ப்பு தற்போது ஏற்படும். நல்ல வளர்ச்சி, குறிப்பாக தொழில் வளர்ச்சி ஏற்படும். சொந்த வீடு அமையும். 


சனி பகவானின் 7ம் பார்வை உங்களின் 12ம் இடத்தில் படுவதால் சுப முதலீடுகள் அதிகமாகும். 3ம் வீட்டை சனி பார்ப்பதால் நல்ல மாற்றங்கள், தொழில் மாற்றம், வேலை மாற்றம், இடமாற்றம் ஆகியவை ஏற்படுவதற்கான வாய்ப்பு உருவாகும். 8ம் வீட்டை பார்ப்பதால் பல காலமாக இருக்கும் மனகஷ்டங்கள் நிவர்த்தியாகும். 


உத்திரம் நட்சத்திரம் 2,3,4 பாதங்களில் பிறந்தவர்களுக்கு புதிய வகையான அனுகிரகங்களும், நல்ல தொழில் வளர்ச்சிகளும் ஏற்படும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கக் கூடிய சொத்துப் பிரச்சனைகள் நீங்கும். நீண்ட நாட்களாக இருக்கக் கூடிய ஆசைகள் நிறைவேறும். சித்திரை நட்சத்திரம் ஒன்று, 2 ஆகிய பாதங்களில் பிறந்தவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் ஏற்படும். 2 அல்லது 3 தொழில்கள் செய்வதன் மூலமாக பல விதமான நன்மைகளும், லாபமும் கிடைக்கும். 


கன்னி ராசிக்காரர்கள் சுதர்சனரை வழிபட வேண்டும். பெருமாளுக்கு காவல் தெய்வமாக இருக்கக் கூடிய சக்கரத்தாழ்வார் எனப்படும் சுதர்சனரை வியாழக்கிழமையில் வழிபடுவது நல்லது. துளசியால் அர்ச்சனை செய்வது, நெய் தீபம் ஏற்றுவது நல்லது. இப்படி செய்வதால் இந்த சனிப்பெயர்ச்சியால் பல நன்மைகள் ஏற்படும்.


(நாளை தொடரும்)

சமீபத்திய செய்திகள்

news

தென் மாவட்டங்களுக்கு.. தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. புதன் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்

news

பொது இடத்தில் கட்டுக்கடங்காத கோபம் வருதா.. கன்ட்ரோல் பண்ண முடியலையா.. இதைப் படிங்க!

news

குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் அறுத்த விவகாரம்.. போலீஸ் விசாரணை தொடங்கியது

news

மாமல்லபுரத்தில் செக்யூரிட்டியை சரமாரியாக தாக்கிய குடும்பம்.. 2 பெண்கள் உள்பட 3 பேர் அதிரடி கைது!

news

முதல்வரும், துணை முதல்வரும் எத்தனை முறை வந்தாலும்.. சேலம் அதிமுகவின் கோட்டை.. எடப்பாடி பழனிச்சாமி

news

தீபாவளி 2024 ஸ்பெஷல்.. அமுதம் அங்காடிகளில்.. ரூ. 499க்கு 15 பொருட்கள்.. அப்படியே செட்டா வாங்கலாம்!

news

BSNL லோகோ மாறிப் போச்சு.. அது மட்டுமா.. 7 புதிய சேவைகளும் அறிமுகம்!

news

64 சிசிடிவி கேமராக்கள்.. 7 பாதுகாப்பு கோபுரங்கள்.. தி.நகரில் தீயாய் வேலை செய்யும் சென்னை போலீஸ்!

news

என்ன நண்பா விக்கிரவாண்டிக்கு கிளம்பலாமா.. த.வெ.க. மாநாட்டு பணிகள் 90% முடிந்தன!

அதிகம் பார்க்கும் செய்திகள்