"கேப்டன்" விஜயகாந்த் நினைவிடத்திற்கு இன்று வருகிறார் விஷால்.. எஸ்.ஏ சந்திரசேகரும் வருகை!

Jan 06, 2024,11:24 AM IST

சென்னை: விஜயகாந்த் நினைவிடத்தில் இன்று நடிகர் விஷால் வருகை தரவுள்ளதால் ரசிகர்கள் குவிந்துள்ளனர். அதேபோல இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகரும் இன்று அஞ்சலி செலுத்தவுள்ளார். அதேபோல நடிகர் அதர்வாவும் பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார்.


சிறந்த நடிகராகவும் விளங்கிய தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் டிசம்பர் 28 அன்று மறைந்தார். பல்வேறு திரை பிரபலங்கள், ரசிகர்கள், தொண்டர்கள், என அனைவரும் அவரது இறப்பு நிகழ்வில் பங்கு பெற்ற நிலையில், சென்னை மாநகரமே ஸ்தம்பித்தது. அந்த அளவிற்கு கேப்டன் மறைவிற்கு அலைகடலென கூட்டம் திரண்டது. பின்னர் அவருடைய உடல் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.  

அவருடைய நினைவிடத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.




விஜயகாந்த் செய்த நன்மைகள் ஏராளம். இதனை நினைவு கூறும் வகையில், பல்வேறு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவரைப் பற்றி பேசி, இனிவரும் காலத்தில் அவரது கொள்கைகளை நிறைவேற்ற வேண்டும் என விஜயகாந்த் நினைவிடத்தில் சபதம் மேற்கொண்டும் வருகின்றனர். 


நடிகர்கள் கார்த்திக், சிவக்குமார், மற்றும் சூர்யா ஆகியோர் விஜயகாந்த் நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினர். இந்த நிலையில், நடிகர் விஜய்யின் தந்தையும், விஜயகாந்த்துக்கு தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்து அவரது முன்னேற்றத்துக்குக் காரணமானவருமான இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர் இன்று விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். இதனைத் தொடர்ந்து சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லம் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கவும் உள்ளார் .


விஷால் வருகிறார்


நடிகர் விஷால் மற்றும் அதர்வா பிரேமலதா விஜயகாந்த்தை நேரில் சந்தித்து  ஆறுதல் தெரிவிக்கவும் உள்ளனர்.  நடிகர் விஷால் வருவதையொட்டி ரசிகர்கள் பெருமளவில் நினைவிடத்தில் குவிந்துள்ளனர். விஜயகாந்த் மறைந்த அன்றே ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார் விஷால். அதில் அழுதபடி பேசினார். இந்த நிலையில் இன்று அவர் சென்னை வந்து விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தவுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்