சிஎஸ்கே கேப்டனாக மீண்டும் தோனி.. ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய.. ருதுராஜ் உருக்கமான பதிவு!

Apr 11, 2025,10:11 AM IST

சென்னை: லேசான எலும்பு முறிவு காரணமாக எஞ்சிய ஐபிஎல் தொடர் போட்டிகளிலிருந்து விலகி உள்ள ருதுராஜ் கெய்க்வாட் உருக்கமான பதிவு ஒன்றே வெளியிட்டுள்ளார்.



நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி உள்ளது.இதில்  நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அது மட்டுமல்லாமல் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது.


இதற்கிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  ராஜஸ்தான் ராயல் அணியுடன் மோதியது. அப்போது தேஜ் பாண்டேவின் பந்துவீச்சில் ருதுராஜ் கெய்க்வாடுக்கு எதிர்பாராத விதமாக முழங்கையில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் காயத்தை பொருட்படுத்தாமல் தொடர்ந்து டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் அவர் விளையாடினார். ஆனால் அவரது வலியின் தீவிரம் அதிகமாக இருப்பதால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.




இந்த நிலையில்  எலும்பு முறிவு காரணமாக ருதுராஜ் கெய்க்வாட்  ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார். இதனைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளவிங் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அதில் ருதுராஜ் கெய்க்வாடுக்கு பதிலாக சிஎஸ்கே அணியின் கேப்டனாக மீண்டும் தோனி அணியை வழிநடத்துவார் என அறிவித்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இரவு 7:30 மணிக்கு நடைபெறுகிறது. தோனி தலைமை ஏற்கும் இந்தப் போட்டி ரசிகர்களால் உற்று நோக்கப்படுகிறது.


இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக பொறுப்பில் இருந்து விலகிய ருதுராஜ்  உருக்கமான பதிவு வெளியிட்டுள்ளார். 


அதில் லேசான எலும்பு முறிவால் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்கவில்லை. ஆனால் வீரர்களுடன் தொடர்ந்து பயணித்து அவர்களை ஊக்கப்படுத்துவேன். கடந்த சில போட்டிகளில் நாங்கள் சிறப்பாக ஆடவில்லை. இளம் விக்கெட் கீப்பர் அணியை வழிநடத்த உள்ளதால் அனைத்தும் மாறும் என உறுதியாக நான் நம்புகிறேன்.


 2025 ஆம் ஆண்டு 

ஐபிஎல் தொடர் எங்களுக்கு சிறந்ததாக அமையும் என எதிர்பார்க்கிறேன். தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு மிக்க நன்றி என கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings அணியில் Baby AB.. குர்ஜாப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ்!

news

அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும்.. ஒரு கை பார்ப்போம்.. முதல்வர் மு க ஸ்டாலின் சவால்!

news

கூட்டணி அழைப்புக்கு நன்றி.. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான்... கூட்டணி குறித்து சீமான் பதில்!

news

தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

பூஜ்ஜிய நிழல் தினம்... பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்!

news

குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டம்... 9 மாவட்டங்களுக்கு அனுமதி!

அதிகம் பார்க்கும் செய்திகள்