அடக்கம் செய்யப்பட்டார்.. ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி.. ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி!

Mar 02, 2024,12:46 PM IST

மாஸ்கோ:  சில தினங்களுக்கு முன்பு சிறையில் உயிரிழந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் உடல் மாஸ்கோவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


இறுதிச் சடங்கின்போது, ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டனர். அவர்கள் அதிபர் புடினை எதிர்த்து சினாட்ராவின் மை வே பாடலை இசைத்து இறுதி மரியாதை செலுத்தினர். நவல்னியின் பெயரை சொல்லிக்கொண்டே கல்லறையின் வெளியே ஏராளமான ஆதரவாளர்கள் மலர்களை ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.


நவல்னியின் உடல் சவப்பெட்டியில் வைக்கப்பட்டு ஒரு வெள்ளை துணியால் மூடப்பட்டு இருந்தது. சவப்பெட்டியின் அருகே அவரது தாய் லூட்மிலா கருப்பு உடை அணிந்தும், தந்தை நவல்னியின் நெற்றியில் முத்தம் கொடுத்தும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இவர்களுடன் உறவினர்கள் நண்பர்கள் என பலர் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டனர்.




ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை எதிர்த்து தீவிரமாக செயல்பட்டு வந்தர் நவல்னி. 47 வயதான நவல்னி, எதிர்கால ரஷ்யா என்ற கட்சியை நடத்தி வந்தார். இவர் எதிர்க்கட்சியாக செயல்பட்டு வந்தாலும், இவருக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்தது. வருங்காலத்தில் இவர் ரஷ்யாவை ஆள்வார் என்றும் கணிக்கப்பட்டு வந்தது. இதனை விரும்பாத ரஷ்ய அதிபர் புடின் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி கடந்த 2021 ஆம் ஆண்டு சிறையில் அடைத்தார்.


புடின் அரசு சுமத்திய ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் 30 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவர் ஆர்டிக் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு வாக்கிங் போனபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் இறந்ததற்கான காரணத்தை இதுவரை ரஷ்ய அரசு வெளியிடவில்லை. 

நவல்னி மர்மமான முறையில் உயிரிழந்தது பல்வேறு குழப்பங்களையும், சர்ச்சைகளையும், ஏற்படுத்தியது.


ஏற்கனவே அதிபர் புடின் தன்னைக் கொலை செய்ய  முயற்சிப்பதாக நவல்னி குற்றம் சாட்டிய நிலையில் அவர் திடீரென சிறையில் உயிரிழந்தது மேலும் பரபரப்பைக் கூட்டியது. இதுவரை இதுகுறித்து அதிபர் புடின் வாயே திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்