சென்னை: நாளை அதிமுக- தேமுதிக இடையே 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்க அதிமுக முன் வந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
லோக்சபா தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில வாரங்களே உள்ளன. தேர்தல் நடைபெறுவதற்கான தேதி குறித்த அறிவிப்பு இந்த வார இறுதியில் வெளிவரும் என எதிர்பார்த்து வருகின்றனர்.இதற்காக ஒவ்வொரு கூட்டணி கட்சிகளும் தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடித்து வருகின்றனர். திமுக தனது கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு முடிந்துள்ள நிலையில்,அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தீவிரமான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகிறது.
மேலும் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் 14 லோக்சபா தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதியை கொடுக்கும் கட்சிகளுடனே கூட்டணி அமைப்பதாக சமீபத்தில் தெரிவித்து வந்தார். இந்த கூட்டணி ரகசியமாக நடைபெற்று வந்ததாகவும் தகவல் பரவி வந்தது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி பிரேமலதா விஜயகாந்த் வசிக்கும் சாலிகிராமம் வீட்டில் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் முதல் கட்ட பேச்சுவார்த்தை ஈடுபட்டனர்.
தற்போது அதிமுக -தேமுதிக இடையேயான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளது. இதில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்க அதிமுக முன் வந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே அதிமுக முதல் கட்ட பேச்சு வார்த்தையில் மாநிலங்களவை பதவி தொடர்பாக தேர்தலுக்குப் பின் முடிவு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டதாகவும் கிருஷ்ணகிரி, விருதுநகர், திருச்சி, கடலூர் ,ஆகிய தொகுதிகளை ஒதுக்க தேமுதிக வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}