மிக்ஜாம் புயல் நிவாரணம்.. ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும்.. விரைவில் ரூ.6000 நிவாரணம்..!

Feb 08, 2024,11:20 AM IST

சென்னை: மிக்ஜாம் புயல் நிவாரண நிதி பெறுவதற்கு, ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்தோருக்கும் விரைவில் ரூ.6000 வழங்கப்படும் என தமிழக அரசு  அறிவித்துள்ளது.


மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கன மழை பெய்தது. இந்த மழையால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு தமிழக அரசு பல்வேறு உதவிகளை போர்க்கால அடிப்படையில் செய்தது.




குறிப்பாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த நிலையில், குடும்ப அட்டை இல்லாதவர்களும் வெள்ள நிவாரணப் பணம் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு வெளியிட்டது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணத்தொகை ரூபாய் 6000 வழங்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்க ஏதுவாக டோக்கன்கள் வீடு வீடாகச் சென்று விநியோகிக்கப்பட்டு வந்தது.


ரேஷன் கார்டு வைத்திருந்தோருக்கு நிவாரணத் தொகை அளித்து முடித்து விட்டநிலையில் தற்போது அடுத்த கட்டமாக ரேஷன் கார்டு இல்லாதோர், வருமான வரி கட்டுவோர் உள்ளிட்டோருக்கு வழங்க நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதற்காக விண்ணப்பித்தோர் கணக்கெடுப்பு பணி தற்போது நிறைவு பெற்றுள்ளது.  விரைவில் இவர்களுக்கும் ரூபாய் 6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு தற்போது தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்