ஆதாருடன்.. பான் எண்ணை இணைக்காதவர்களிடமிருந்து.. ரூ. 600 கோடி அபராதம் வசூல்!

Feb 06, 2024,04:09 PM IST

புதுடில்லி: ஆதார் எண்ணுடன் பான் எண்ணை குறிப்பிட்ட காலத்திற்குள் இணைக்கத் தவறியவர்களிடம் இருந்து ரூ.600 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. வருமான வரி ஏய்ப்பை தடுக்கும் நோக்கில் ஆதாருடன் பான் எண்ணை இணைக்க மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.இந்த அறிவிப்பு வந்த பின்னரும் ஏராளமானோர் இணைக்காமல் இருந்தனர். அவர்களுக்கு மீண்டும் குறிப்பிட்ட காலக் கெடு கொடுத்து இணைக்க வாய்ப்பளித்தது மத்திய அரசு. 


குடிமக்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வருமான வரி செலுத்துவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்றும் தீர்ப்பளித்தது. இதன் பிறகு பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களது பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. 




அதன் பின்னர் கொரோனா தொற்று பரவியதால் மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இறுதியாக பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க 2023 ஜூன் 30ம் தேதி என அறிவித்திருந்தது மத்திய அரசு. இதற்கு மேல் இணைக்காதவர்களின் பான் எண் செயலற்றதாகிவிடும் எனவும் அறிவித்தது. 


அதன் பின்னர், ஆதார் பான் எண்ணை இணைக்காதவர்களுக்கு முதலில் ரூ.500 அபராதம் விதித்தது. அதன் பிறகு காலக்கெடுவிற்கு பிறகு இணைப்பவர்கள் ரூ.1000 அபராத தொகையை செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த காலக்கெடுவுக்கு பின்னரும் ஒரு நபர் பான் மற்றும் ஆதாரை இணைக்க தவறினால் அவரின் பான் அட்டை செயலிழந்து விடும். செயலிழந்த பான் அட்டையை பயன்படுத்த ரூ.10,000 அபராதம் வரை செலுத்த வேண்டியிருக்கும் என வருமானவரித்துறை எச்சரித்தது.


இதன்படி அபராத தொகையை செலுத்தி பான் எண்ணை புதிப்பித்தவர்கள் செலுத்திய தொகை ரூ.601.97 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக லோக்சபாவில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறுகையில், கடந்த ஜனவரி 29ம் தேதி நிலவரப்படி, ஆதாருடன் பான் எண்ணை இதுவரை 11.48 கோடி பேர் இணைக்கவில்லை. ரூ.1000 அபராதம் செலுத்தி தாமதமாக பலர் இணைத்துள்ளனர். கடந்த ஜனவரி 31ம் தேதி நிலவரப்படி ரூ.601.97 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்