டில்லி : ரூ.2000 நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்வதற்காக மத்திய அரசு அளித்திருந்த காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. ஆனால் இன்னும் ரூ.2000 நோட்டுக்களை மாற்றாதவர்களும் தங்களிடம் உள்ள நோட்டுக்களை மாற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது.
ரூ.2000 நோட்டுக்களை திரும்ப பெறுவதாக மத்திய அரசு ஜூன் மாதம் அறிவித்தது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுக்கள் வங்கிக் கிளைகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் அல்லது வங்கிக் கணக்கில் முதலீடு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கு செப்டம்பர் 30 ம் தேதி வரை காலக் கெடு வழங்கப்பட்டதுடன், அது மேலும் நீட்டிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டது. இதனால் பலரும் தங்களிடம் இருந்த ரூ.2000 நோட்டுக்களை மாற்றி வந்தனர்.
ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கு மேலும் சில நாட்கள் அவகாசம் வேண்டும் என பலரும் கேட்டுக் கொண்டதால் இதற்கான கால அவகாரத்தை அக்டோபர் 07 வரை மத்திய ரிசர்வ் வங்கி நீட்டித்தது. இதன்படி ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கான காலக்கெடு இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இதுவரை 80 சதவீதம் ரூ.2000 நோட்டுக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும், இன்று ரூ.12,000 கோடி அளவிலான ரூ.2000 நோட்டுக்கள் திரும்ப வரவில்லை என்றும் ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
காலக் கெடு முடிந்து விட்ட நிலையில் ரூ.2000 நோட்டுக்களை நாளை முதல், அதாவது அக்டோபர் 08ம் தேதி முதல் ரூ.2000 நோட்டுக்களை மாற்ற வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்ற விதிமுறைகளை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் படி,
* ஆர்பிஐ.,யின் 19 மண்டல அலுவலங்களில் ஏதாவது ஒன்றிற்கு நேரில் சென்று மாற்றிக் கொள்ளலாம்.
* ரூ.20,000 வரையிலான ரூ.2000 நோட்டுக்களையோ அல்லது ஒரே சமயத்தில் 10 ரூ.2000 நோட்டுக்களையோ நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும்.
* தபால் மூலம் ஆர்பிஐ மண்டல அலுவலகங்களுக்கு ரூ.2000 நோட்டுக்களை அனுப்பி வைக்கலாம்.
* ரூ.20,000 க்கு அதிகமான ரூ.2000 நோட்டுக்களை மாற்ற வேண்டும் அல்லது வேறு ஏதாவது வழியில் மாற்ற வேண்டும் என்பவர்கள் அதற்கான உரிய ஆவணங்களை அரசிடம் சமர்பிக்க வேண்டும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}