அகமதாபாத்: இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவீந்திர ஜடேஜாவுடன், அவரது மனைவியும் பாஜக எம்எல்ஏவுமான ரிவபா ரவீந்திர ஜடேஜா கத்தியுடன் சூப்பராக போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.
சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவிடம் போராடித் தோல்வி அடைந்தது. இதே அகமதாபாத் மைதானத்தில்தான் ஐபிஎல் இறுதிப் போட்டியில் ரவீந்திர ஜடேஜா அட்டகாசமாக ஆடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்திருந்தார். ஆனால் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவரது ஆட்டம் ஏமாற்றத்தையே கொடுத்தது.
இந்த நிலையில் அவரது மனைவி ரிவபா டிவிட்டர் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களைப் போட்டுள்ளார். அதாவது கத்தியுடன் ரிவபாவும், அவரது கணவர் ஜடேஜாவும் இருக்கிறார்கள். கத்தியை எப்படி சுத்துவது என்று ரிவபாவுக்கு, ஜடேஜா சொல்லிக் கொடுப்பது போலத் தெரிகிறது.
குஜராத்தில் பிரபலமானது இந்த கத்தி டான்ஸ். மெர் சமூக மக்களிடையே இது பாப்புலரானது, இது அவர்களது கலாச்சாரமும் கூட. ஜடேஜா கூட தனது திருமண விழாவின்போது கத்தி சுற்றி டான்ஸ் ஆடி அசத்தியிருந்தார். அப்போது அந்த வீடியோ படு வேகமாக வைரலானது. இந்த நிலையில் கத்தி சுற்றிக் காட்டி பயிற்சி கொடுத்தாரா அல்லது இருவரும் சேர்ந்து ஆடுவதற்கான முன்னோட்டமா இது என்று தெரியவில்லை.
இந்தப் புகைப்படத்தைப் போட்டு, மகுடம் முக்கியமில்லை.. கத்திதான் முக்கியம் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார் ரிவபா. இதன் மூலம் அவர், உலகக் கோப்பையை வெல்லாதது முக்கியம் இல்லை.. சூப்பராக சண்டை செய்தோம்ல.. அது போதும் என்று ஆறுதலாக சொல்லியுள்ளார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் விளக்கம் தருகிறார்கள்.
அதுவும் சரித்தான்..!
Thala is Back: மீண்டும் கேப்டனானார் தல தோனி.. ருத்துராஜ் கெய்க்வாட் ஐபிஎல் தொடரிலிருந்து விலகல்!
விடைபெறுகிறார் அண்ணாமலை.. வந்தாச்சு தமிழ்நாடு பாஜக தலைவர் தேர்தல்.. நாளை விருப்ப மனு!
பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு
பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்
தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா..?
மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடி திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
Flower Market Price: பங்குனி உத்திரம்... கோயம்பேட்டில் பூக்களின் விலை உயர்வு
சிங்கப்பூர் அரசு விழாவில்.. வாழ்வியல் இலக்கியப் பொழில் சிறப்பு உரையாளராக.. முனைவர் மு. ஜோதிலட்சுமி
பனையூரில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
{{comments.comment}}