டெல்லி: வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் சிலிண்டர்கள், ஆண்டுக்கு 15 (14.20kg) மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என இந்திய எண்ணெய் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
நாட்டில் சமையல் சிலிண்டர்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதாவது ஒரு வீட்டிற்கு ஒரு இணைப்பு அல்லது இரண்டு இணைப்புகளின் மூலம் சமையல் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இரண்டு சிலிண்டர்கள் பதிவு செய்து கொள்ளலாம். அதாவது ஒரு சமையல் சிலிண்டர் காலியானால், காலியான சிலிண்டரை கொடுத்த பிறகு தான் இரண்டாவது சிலிண்டரை பதிவு செய்ய முடியும். அதே சமயத்தில் நிறைய பேர் ஒரு இணைப்புகளை மட்டுமே பெற்று பயன்பெற்று வருகின்றனர். இதில் மத்திய அரசு வருடத்திற்கு 12 சிலிண்டர்களுக்கு மட்டுமே மானியம் வழங்குகிறது. அதற்கு மேல் பயன்படுத்தும் சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கப்படுவதில்லை.
இந்த நிலையில் இந்திய எண்ணெய் நிறுவனம் திடீரென வீட்டு உபயோக சிலிண்டருக்கு கட்டுப்பாடு விதித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வாடிக்கையாளர்கள் ஒரு வீட்டில் ஆண்டுக்கு 15 சிலிண்டர்கள் வரை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். 14.20 கிலோ பயன்படுத்தி விட்டு அதற்கு மேல் தேவைப்பட்டால் அதற்கான உரிய காரணத்தை கடிதமாக தந்த பின், கூடுதல் சிலிண்டர்களை பெறலாம். 15 சிலிண்டருக்கு மேல் பதிவு செய்பவர்களுக்கு தற்போது மெசேஜ் அனுப்பப்பட்டு வருகிறது.
மேலும், முறைகேடாக சிலிண்டர்களை பயன்படுத்துவதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!
அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி
கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!
மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!
எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!
அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!
{{comments.comment}}