ஏம்மா என்னைய விட்டுட்டுப் போன.. தவிச்சுப் போன குட்டி.. தெப்பக்காட்டில் அடைக்கலம்.. சூப்பர் கவனிப்பு!

Jun 11, 2024,06:11 PM IST

நீலகிரி: கடந்த ஒரு வாரமாக தாயிடம் இருந்து பிரிந்து வாடி வந்த குட்டி யானையை, தாயுடன் சேர்க்க வனத்துறையினர் போராடிய நிலையில், தாய் யானை குட்டி யானையை நிராகரித்து விட்டது. இதனால் குட்டி யானையை முதுமலை புலிகள் சரணாலய வளாகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு கொண்டு சென்று அங்கு சிறப்பாக கவனித்து வருகின்றனர்.


கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் கடந்த ஜூன் மூன்றாம் தேதி  உடல் நலக்குறைவால் பெண் யானை ஒன்று நகர முடியாமல் கிடந்தது. அதன் வயது கிட்டத்தட்ட 40 இருக்கும்.அதனுடன் மூன்று மாத ஆண் குட்டி யானையும் இருந்தது. இதனை அறிந்த வனத்துறையினர் தாய் யானையை பொக்லைன் மூலம் மீட்டு கடந்த ஐந்து நாட்களாக சிகிச்சை அளித்து வந்தனர்.அப்போது தாயுடன் இருந்த குட்டி யானையையும் வனத்துறையினர் பரமரித்து வந்தனர். 




இந்த நிலைியல் தாய் யானை உடல் நலம் தேறியதும் காட்டுக்குள் சென்று தனது கூட்டத்துடன் இணைந்தது. ஆனால் தனது குட்டியை தன்னுடன் சேர்க்க மறுத்து விட்டது. தாய் யானையுடன் சேர முடியாததால் குட்டி யானை தவித்தபடி அங்குமிங்கும் திரிந்துள்ளது. அதன் பிளிறல் சத்தம் கேட்டுவிரைந்து சென்ற வனத்துறையினர் டாப்சிலிப் பகுதிக்கு பாகனை அழைத்து வந்தனர். இதன் பின்னர் பாகன் உதவியுடன், தாய் யானையை கண்டறிந்து குட்டி யானையை தாயுடன் சேர்க்க பல கட்டமாக முயற்சிகளை மேற்கொண்டனர். 


ஆனால் இந்த முயற்சிகள் தோல்வியை தழுவியது. இதனால் குட்டி யானைக்கு பால் பழம் கொடுத்து ஒரு குழந்தையைப் போல பாகன் மிகவும் பாசமாக கவனித்து வந்தார். கடந்த மூன்று நாட்களாக குட்டி யானையை மீண்டும் மீண்டும் தாயுடன் சேர்ப்பதற்கான பணிகளை வனத்துறையினர் தீவிர படுத்தினர். இந்த நிலையில் தாய் யானை குட்டி யானையை நிராகரித்து விரட்டியதால் வேறு வழியில்லாமல், வனத்துறை அதிகாரிகளின் உத்தரவின் படி முதுமலை புலிகள் காப்பத்தில் உள்ள தெப்பக்காடு யானை முகாமில் குட்டி யானையை பராமரிக்குமாறு உத்தரவிட்டனர். 




இதன்படி,குட்டி யானை இன்று அதிகாலை நான்கு மணி அளவில் முதுமலை யானைகள் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டது. அங்கு குட்டி யானையை பாகன் சிறப்பாக கவனித்துக் கொள்கிறார். அதற்குத் தேவையான உணவு பால் பழம் உள்ளிட்டவை கொடுக்கப்படுகிறது. அதே முகாமில் மேலும் ஒரு குட்டி யானையும் இருக்கிறது. இதனால் மீட்கப்பட்ட குட்டி யானைக்கு சரியான கம்பெனி கிடைத்துள்ளதால் விளையாடுவதில் பிரச்சினை இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பொதுவாகவே குட்டி யானைகளை தாய் யானை கைவிடாது. ஆனால் எப்போதாவது அரிதாக இதுபோல நடக்குமாம். இதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாது என்றும் விலங்கியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்