மெரீனாவில் கோலாகலம்.. தேசியக் கொடி ஏற்றி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.. கண்கவர் நிகழ்ச்சிகளுடன் விழா!

Jan 26, 2025,09:20 AM IST

சென்னை: நாட்டின் 76வது குடியரசு தின விழா சென்னை மெரீனா கடற்கரையில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காந்தி சிலை அருகே நடந்த நிகழ்ச்சியில் மூவண்ணக் கொடியை ஆளுநர் ஆர். என். ரவி ஏற்றி வைத்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.


நாட்டின் 76வது குடியரசு தின விழா எழுச்சியுடன் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் கர்தவ்யா பாதையில் இன்று சிறப்பான அணிவகுப்புடன் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. அதேபோல அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.




சென்னையில் கடற்கரை காந்தி சிலை அருகே நடந்த விழாவில் ஆளுநர் ஆர். என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், நீதிபதிகள், பல்துறைப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.  தேசியக் கொடியேற்றும் முன்பு ஹெலிகாப்டர் மூலம் ரோஜாப் பூக்கள் தூவப்பட்டது. 


தேசியக் கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா தொடங்கியது. அதைத் தொடர்ந்து பல்வேறு மாநில கலைக்குழுக்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பல்வேறு துறைகளின் அலங்கார ரதங்களும் அணிவகுத்து வந்தன. வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 




முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய பதக்கங்கள்:


வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம், தீயணைப்பு காவலர் வெற்றிவேலுக்கு வழங்கப்பட்டது. கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.ஏ.அமீர் அம்சாவுக்கு வழங்கப்பட்டது. இவர் கொரோனா காலத்தில் 500க்கும் மேற்பட்ட சடலங்களை அடக்கம் செய்ய உதவினார்.


சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது தேனிமாவட்டத்தைச் சேர்ந்த ரா.முருகவேலுக்கு வழங்கப்பட்டது. காந்தியடிகள் காவலர் பதக்கங்கள் பெ.சின்னகாமணன், கி.மகாமார்க்ஸ், க.கார்த்திக், கா.சிவா, ப.பூமாலை ஆகியோருக்கு வழங்கப்பட்டது.


மெரீனா கடற்கரையில் குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. போக்குவரத்தும் மாற்றப்பட்டிருந்தது. தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள், பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் தீவிர பாதுகாப்பும் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings அணியில் Baby AB.. குர்ஜாப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ்!

news

அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும்.. ஒரு கை பார்ப்போம்.. முதல்வர் மு க ஸ்டாலின் சவால்!

news

கூட்டணி அழைப்புக்கு நன்றி.. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான்... கூட்டணி குறித்து சீமான் பதில்!

news

தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

பூஜ்ஜிய நிழல் தினம்... பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்!

news

குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டம்... 9 மாவட்டங்களுக்கு அனுமதி!

அதிகம் பார்க்கும் செய்திகள்