புதுப் பொலிவு கண்ட "கலைஞர்" கருணாநிதி நினைவிடம்.. பிப்ரவரி 26ம் தேதி திறப்பு.. முதல்வர் அறிவிப்பு

Feb 22, 2024,07:25 PM IST

சென்னை: புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் மற்றும் கலைஞர் கருணாநிதி நினைவிடம் வருகின்ற 26ம் தேதி திறக்கப்பட உள்ளதாக சட்டசபையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


தமிழக அரசு சார்பில் 2.21 ஏக்கர் பரப்பளவில்  39 கோடி மதிப்பீட்டில் நவீனமான முறையில் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் தற்பொழுது முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. இதனை அடுத்து வரும் 26 ஆம் தேதி கருணாநிதி நினைவிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.




தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி உடல் நலம் பாதிப்பால் காலமானார். இதை அடுத்து அவரது உடல், அண்ணா சமாதிக்குப் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் நினைவிடம் கட்ட 2021 ஆம் ஆண்டு தமிழக அரசு  சார்பில் நிதி ஓதுக்கப்பட்டது. இதையடுத்து 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ. 39 கோடியில் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டது. ஏற்கனவே இருந்த நினைவிடம் புனரமைக்கப்பட்டு வரும் திங்கட்கிழமை திறக்கப்படுகிறது.


பிப்ரவரி 26ஆம் தேதி இரவு 7 மணிக்கு கலைஞர் நினைவிடம் திறக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்,  நின்ற தொகுதிகளில் எல்லாம் வென்ற தலைவர். நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய தலைவர். கலைஞர் நினைவிடம் முழுமை அடைந்திருக்கிறது. அது மட்டுமல்ல கலைஞரை உருவாக்கிய நமது தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 


புதுப்பிக்கப்பட்ட அண்ணாவின் நினைவிடமும் கலைஞரின் நினைவிடமும் வருகின்ற பிப்ரவரி 26ஆம் தேதி இரவு 7 மணிக்கு திறக்கப்பட உள்ளது. நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் அச்சிடப்படவில்லை. விழாவாக கொண்டாட விரும்பவில்லை. நிகழ்ச்சியாக நடத்த முடிவெடுத்துள்ளோம். ஆகவே நிகழ்ச்சிக்கு எதிர்க்கட்சி மற்றும் தோழமைக் கட்சி உட்பட எல்லா கட்சி உறுப்பினர்களும் வர வேண்டும் என்று சபாநாயகர் மூலம் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்