வைகையில் நீர்திறப்பு.. மதுரையில் வெள்ள பெருக்கு.. கோரிப்பாளையத்தில் போக்குவரத்து நிறுத்தம்!

Dec 19, 2023,10:56 AM IST

மதுரை: வைகை அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால், மதுரை வைகையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதையடுத்து கோரிப்பாளையத்தில்  தரைப் பாலம் தண்ணீரில் மூழ்கியதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், குமரி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி  காரணமாக தென் மாவட்டங்களில் அதீத கன மழை கொட்டி தீர்த்தது. தற்போது அந்த சுழற்சியானது விலகி விட்டது. அரபிக் கடலுக்குள் போய் விட்டது.


இருப்பினும் தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழையினால், வைகை ஆணையில் நீர்வரத்து  அதிகரித்தது. அணை முழு கொள்ளளவை எட்ட உள்ள நிலையில், மதகுகள் வழியாக தற்போது 3000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.




வைகை அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதால்  மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை  மாவட்டங்களுக்கு 3வது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வைகை கரையோரம் உள்ள மக்கள் யாரும் ஆற்றில் இறங்கக்கூடாது என்றும், பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. வைகை ஆற்றின் இருகரைகளையும் தொட்டபடி தற்பொழுது வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.


மதுரை வைகை ஆற்றில் வெள்ள பெருக்கெடுத்துச் செல்வதால் கோரிப்பாளையத்தில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் போக்குவரத்து அந்தப் பகுதியில் ஸ்தம்பித்துள்ளது. ஆரப்பாளையத்தில் இருந்து தெப்பக்குளம் விரகனூர் வரை நகருக்குள் நுழையாமல் வைகை கரையோரம் செல்லும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. செல்லூர்- ஆழ்வார்புரத்திற்கும் இடையே பேச்சி அம்மன் படித்துறை பகுதியில் இருந்து ஓபுலா படித்துறை பாலம் செல்வதற்கு இரண்டு கரை ரோட்டிலும் ஆற்றுத்தண்ணீர் 2 அடி உயரத்தில் பாய்ந்து செல்கிறது. 


ஆற்றை ஒட்டி ரோடு தரை மட்டமாக இருந்ததால் வெள்ளம் பாய்ந்து ஓடும்போது கரை ரோடுகளில் ஆறாக மாறிவிட்டது.  இதனால் பேச்சியம்மன் படித்துறையில் இருந்து தெப்பக்குளம் வரை வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மீனாட்சி அரசு கல்லூரி வழியாக செல்லும் வைகை ஆற்றுக்கரை ரோட்டில் வெள்ளம் சூழ்ந்ததால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

காலை நேரம் என்பதால் பள்ளி,கல்லூரி, அலுவலகம் செல்பவர்கள் அதிகம் செல்லும் பாதை அது என்பதால், தற்பொழுது போக்குவரத்து அந்த பகுதிகளில் ஸ்தம்பித்துள்ளது. இதனால் மக்கள் செய்வது அறியாமல் தவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்