கரைபுரண்டோடும் தாமிரபரணி.. நெல்லையை சூழ்ந்த வெள்ளம்.. 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

Dec 17, 2023,06:53 PM IST

திருநெல்வேலி : தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரில் அளவு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதால் நெல்லையே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.


வங்கடக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நெல்லை, கன்னியாக்குமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே இந்த 4 மாவட்டங்களிலும், சென்னையில் பெய்ததை போல் பேய் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து, மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.




இந்நிலையில் தொடர்ந்து கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் நீராவரத்து அதிகரித்து வருகிறது. அணைகளுக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் நீர் முழுவதும் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. நெல்லை மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 30,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 40,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


பகல் 2 மணி வரை 15,000 கனஅடி நீரும், மாலை 4 மணிக்கு மேல் 30,000 கனஅடி நீரும் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது தாமிரபரணி ஆற்றில் 3000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படுவதால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கனமழையால் ஊரே வெள்ளக்காடாகி உள்ள நிலையில் தற்போது ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வெள்ளநீரும் ஊருக்குள் வரும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.  அணைகளின் நீர்மட்டமும் தொடர்ந்து அதிகரித்த படி உள்ளதால் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

இதற்கிடையே, தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், நான்கு மாவட்டங்களுக்கு வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இங்கு 21 செமீக்கும் மேற்பட்ட அளவில் மழை பெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேய் மழை பெய்து வருவதால் குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவியில் அபாயகரமான அளவுக்கு தண்ணீர் கொட்டிக் கொண்டுள்ளது. இதனால் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்