ரெப்போ வட்டி விகித்தில் மாற்றமில்லை.. பொருளாதார வளர்ச்சி 7.2% ஆக இருக்கும்.. ரிசர்வ் வங்கி தகவல்

Jun 07, 2024,06:54 PM IST

டெல்லி: இந்தியாவின் பொருளாதார சூழல் வலுவாக இருப்பதால் 7 சதவீதமாக கணிக்கப்பட்டிருந்த ஜிடிபி வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். அதேசமயம், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, தொடர்ந்து 8வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.


இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கை அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. 6 உறுப்பினர்களைக் கொண்ட கொள்கை வகுப்புக் கமிட்டியில் 4-2 என்ற அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகளை சக்கிகாந்த தாஸ் அறிவித்தார்.  இதை அறிவித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், இந்தியாவின் பொருளாதாராம் வலுவான அடித்தளத்துடன் கூடியதாகும். அது வலுவான நிலையில் இருப்பதால் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளோம். முன்பு இது 7 சதவீதமாக கணிக்கப்பட்டிருந்தது.




உலகம், ஒரு நெருக்கடியிலிருந்து மீண்டால் அடுத்த நெருக்கடி பின்னாடியே காத்திருக்கிறது. இந்த சூழலுக்கு மத்தியிலும் கூட இந்தியாவின் பொருளாதார அடித்தளம் வலுவாக இருப்பது ஆரோக்கியமானது, மகிழ்ச்சி தரக் கூடியதாகும். ஸ்திரமான வளர்ச்சியை நாம் காணக் கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.


பணவீக்கத்திற்கு எதிரான நமது போராட்டம் கடுமையானதாகவே இருக்கிறது. அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். இதன் பொருட்டே ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. அது 6.5 சதவீதமாகவே தொடரும். எட்டாவது முறையாக நாம் மாற்றங்களை செய்யாமல் தவிர்த்துள்ளோம் என்றார் அவர். 


முன்னதாக ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை எதிர்பார்த்து மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் உயர்வு கண்டு காணப்பட்டது. அதேபோல தேசிய பங்குச் சந்தையான நிப்டியிலும் உயர்வு காணப்பட்டது.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்